காலஞ்சென்ற தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க சுமார் ஆயிரம்…

காலஞ்சென்ற தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் உடல் இன்று காலை மணி 10.30 வாக்கில் கோலா கெடா, ஸ்கோலா கெபாங்சான் தெபாங்காவுக்கு ஒரு ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பள்ளிக்கு உள்ளும் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை தெரிவிக்க காத்திருந்தனர்.…

முன்னாள் அம்னோ கட்சியினரைச் சேர்த்துக் கொள்ளும் விசயத்தில் கவனம் தேவை:…

மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் அம்னோவின் முன்னாள் தலைவர்களைச் சேர்த்துக் கொள்வதில் அவசரம் கூடாது என்று பெர்சத்துவை எச்சரித்துள்ளார். அம்னோவில் செல்லாக்காசாகிவிட்ட அவர்களில் சிலரை பெர்சத்துவில் இணைத்துக் கொண்டது பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது என்றவர் கூறினார். “அவர்கள் ஒரு நேரத்தில் நம் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து…

சீ ஃபீல்ட் ஆலய விவகாரம்: இந்து  சங்கம் விலகி நிற்க வேண்டும்- வேதமூர்த்தி

சுபாங் ஜெயா, சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயப் பிரச்சினையில்  மலேசிய இந்து  சங்கம் விலகிநிற்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர்  பொன்.வேத மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். தேசிய அளவில் பிரதிபலித்த இந்தப் பிரச்சினைக்கு அமைதியாகவும் அதேவேளை அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தேசிய சட்டத் துறைத்  தலைவர் (ஏ.ஜி.) ஒரு சுமுகமான தீர்வை கண்டுள்ள நிலையில், மலேசிய இந்து சங்கம் புதுக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீ ஃபீல்ட் ஆலயம்தற்பொழுது எட்டிவரும் ஒரு சுமூகமான சூழலைக் கெடுக்கவும் தேசிய சட்டத்துறைத் தலைவருக்கே வழிகாட்டவும் முயல்வதாகத் தெரிகிறது. அரச நடைமுறைச் சட்டம், 9-ஆவது பிரிவு, சட்டத் துறைத் தலைவருக்கு அளித்துள்ள அதிகாரவரம்பிற்குட்பட்டும் பொது அமைதியில் நாட்டம் கொண்டும் சட்டத்துறைத் தலைவர் எடுத்துள்ளமுடிவை இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சுமூகமான சூழலில், வெண்ணெய் திரண்டு வருகின்ற  நேரத்தில் தாழியை உடைக்கமுயல்வதைப்போல, மோகன் ஷான், கெடுக்கின்ற விதமாகவும் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கை விடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் சட்டத்துறைத் தலைவரின் ஒருங்கிணைப்பின்வழி எடுக்கப்பட்டுள்ள முடிவிற்கு அனைத்துத்தரப்பினரும் இசைவும் ஒப்புதலும் தெரிவித்துள்ள நிலையில், மோகன் ஷான் மட்டும் இந்த ஆலய சிக்கல் தொடர்பான தெளிவும் புரிதலும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு தவறாக வழிகாட்ட முயலக் கூடாதென்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் கூறினார். -நக்கீரன்

நுருல் பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகினார், அரசாங்கத்தில் பதவி…

நுருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சிதரும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இனி, அரசாங்கப் பதவிகளிலும் இருக்கப் போவதில்லை. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் மகளுமான நுருல் இஸ்ஸா இன்று பிற்பகல்…

உங்கள் கருத்து: ‘அந்த நல்லவர்கள்’ அடுத்த ஜிஇ-வரை ஹராப்பானுக்கு வெளியிலேயே…

அம்னோவில் நல்லவர்களும் உண்டு என்கிறார் மகாதிர்   டேவிட் தாஸ்: 70விழுக்காட்டு மலாய்க்காரர்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்கவில்லை. அவர்கள் அம்னோ அல்லது பாஸை ஆதரித்தார்கள். அதற்காக அவர்களைக் கெட்டவர்கள் எனலாமா? பலருக்கு அவர்கள் காலங்காலமாக இருந்து வந்துள்ள ஒரு கட்சியைக் கைவிட்டு வர மனமில்லை. பாஸ் ஆதரவாளர்களில் ஒரு…

ஜாஹிட்: தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே போனால் அம்னோ அழிந்து விடும்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கட்சிக்குள் பிளவுகள் தொடர்வது அதன் அழிவுக்குத்தான் வழிகோலும் என்று எச்சரித்தார். கட்சித் தலைவர்கள் எது வரினும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்வது பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றவர் வலியுறுத்தினார். “தோல்விக் காலத்தில், கட்சி வீழ்ச்சி…

முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு மனு செய்துள்ளார்

  மலாக்கா முன்னாள் முதலமைச்சர் தம்பி சிக் பெர்சத்துவில் சேர்வதற்கு தமது மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று ஆயர் கெரோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஹிம் தம்பி சிக் அவரது மனுவை மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ரெட்ஸுவான் யுசோப்பிடம் கொடுத்தார். மலாக்காவின் ஆறாவது முதலமைச்சராக 12 ஆண்டுகள்…

ஹரப்பான் அரசாங்கத்திற்கு ஐசெர்ட் தேவையில்லை, சுல்கெப்லி கூறுகிறார்

  பக்கத்தான் அரசாங்கத்திற்கு ஐநாவின் அனைத்துலக அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை அகற்றும் (ஐசெர்ட்) ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று டாக்டர் சுல்கெப்லி அஹமட் இன்று கூறினார். ஹரப்பான் நிருவாகம் கடந்த காலத்தில் சிறுபான்மை இனம் மற்றும் சமயத்தினரைக் கொடுமைப்படுத்திய அரசாங்கங்கள் போன்றதல்ல என்று அமனாவின்…

கோபிந்த்: அம்னோவுடன் இணைந்து டிஎபி செயல்படாது

  இவ்வாரம் அம்னோவிலிருந்து பலர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். டிஎபி அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யாது என்று டிஎபியின் துணைத் தலைவர் கோபிந்த் சிங் உறுதியாகக் கூறுகிறார். டிஎபி அம்னோவுடன் இணைந்து செயல்படாது. இது இறுதி முடிவாகும். அவர்கள் எங்களுக்கு எதிராக 14-ஆவது பொதுத் தேர்தல் வரையில் போராடியுள்ளனர். அம்னோவை…

மலாக்கா முன்னாள் சிஎம் அம்னோவிலிருந்து நாளை வெளியேறுகிறார்

  மலாக்காவின் முன்னாள் முதலமைச்சர் அம்னோவிலிருந்து விலகப் போகிறார் என்பதை நாளை ஒரு நிகழ்ச்சியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரித்தா ஹரியான் கூற்றுப்படி, இந்த முன்னாள் முதலமைச்சர் மலாக்காவின் "மேம்பாட்டு தந்தை". மலாக்காவின் முதலைமைச்சராக 1999-லிருந்து 2013 வரையில் பதவியிலிருந்த முகமட் அலி ருஸ்தாம் வழக்கமாக இவ்வாறு அழைக்கப்பட்டார்.…

இந்தியர் கட்சியின் அவசரத் தேவை

புதிய மலேசியா உருவாகியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்திலும் அரசு சார்பான மற்ற அமைப்புகளிலும் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இடம்பெறுவதற்காக இந்தியர் சார்பான அரசியல் கட்சிக்கு அவசரத் தேவை எழுந்துள்ளதென்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். மலேசிய இந்தியச்  சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, கல்வி,…

பாஸ்: அம்னோ கட்சியினருக்கு எங்கள் கதவுகளும் திறந்தே உள்ளன

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், அம்னோ கட்சியின் எம்பிகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, சாதாரண உறுப்பினர்களோ அவர்கள் தாராளமாக பாஸ் கட்சியில் சேரலாம் என்றார். “எங்கள் கதவு திறந்தே உள்ளது. எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் , அல்லது சாதாரண உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்கிறோம். “ஆனால்,…

அம்னோ நிலைத்திருக்க நல்ல தீர்வு தேவை- நஜிப்

அம்னோவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை பெருகி வரும் வேளையில் அக்கட்சி நிலைத்திருக்க சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் என்று அதன் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நிலைமை மோசமாக உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்கத்தக்க ஒரு தீர்வு காணப்பட வேண்டும்”, என்று நஜிப் இன்று பெக்கானில் கூறினார்.…

கேமரன் மலையில் புதிய தேர்தல்

தேர்தல் ஆணையம், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தேர்தல் நடத்தப்படும் என்பதை இன்று உறுதிப்படுத்தியது. 4வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு கேமரன் மலையில் கிடைத்த வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராக மேல்முறையீடு எதுவும் செய்யப்படாததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக இசி தலைவர் அஸ்ஹார் அசிசான்…

அம்னோவில் தேர்தல் ‘உடனடியாக’ நடத்தப்பட வேண்டும்- கைரி

அம்னோவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையில் வெளியேறுவதால் கட்சிக்குப் புதிய தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்க “உடனடி”த் தேர்தல் நடத்தப்படுவது அவசியம் என்கிறார் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். இணையத்தள பதிவு ஒன்று கேட்டுக்கொண்டிருப்பதைப் போல் புதிய கட்சித் தேர்தலை நடத்துவதற்காக அவசரப் பொதுக் கூட்டம் கூட்டப்படுவதைத்…

தானா மேரா எம்பி அம்னோவிலிருந்து வெளியேறினார்

ஆகக் கடைசியாக அம்னோவிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தானா மேரா எம்பி இக்மால் ஹிஷாம் அப்துல் அசீஸ் ஆவார். அம்னோவிலிருந்து வெளியேறுவதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார். தானா மேரா தொகுதித் தலைவருமான இக்மால், தொகுதி மக்களின் நலனை முன்னிறுத்தி இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இக்மால் கட்சியிலிருந்து…

பெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்தில் ரிம3மில்லியன் கையூட்டு பெற்றதாக இசாமீது…

இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னாள் பெல்டா தலைவர் இசா சமட்மீது நம்பிக்கை மோசடி(சிபிடி) செய்ததாக ஒரு குற்றசாட்டும் ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு பெற்றதன் தொடர்பில் ஒன்பது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. குற்றச்சாட்டுகள் அனைத்தும் கூச்சிங்கில் பெல்டா தங்குவிடுதி வாங்கிய விவகாரத்துடன் தொடர்புடையவை. நெகிரி செம்பிலானின் நீண்டகால முன்னாள் மந்திரி…

கிள்ளானில் அரவாணி ஒருவர் அடிக்கப்பட்டு மரணம்

புக்கிட் திங்கியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்புறம், ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆண்கள் குழு ஒன்றினால் தாக்கப்பட்ட அரவாணி ஒருவர், கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமுற்றார். சபாவைச் சேர்ந்த 32 வயதான அவர், இன்று காலை 10.47 மணியளவில், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் இறந்துபோனார். நேற்று காலை,…

அம்னோ தொடர்ந்திருக்க பிரதமராகக் காத்திருக்கும் அன்வாரை நாடுகிறார் நஸ்ரி

அம்னோ ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படையாகச் சுருங்கியுள்ளது. அதற்குச் சாதகமான எதையும் டாக்டர் மகாதிரிடமிருந்து அது பெற முடியவில்லை. இதற்கு காரணம் அம்னோ உயர்நிலை தலைவர்களுடன் ஒத்துழைப்பு பற்றி ஆலோசிப்பதற்கு முன்பு அம்னோ கலைக்கப்பட வேண்டும் என்கிறார்…

நான் அனைவரையும் சந்திக்கிறேன் – அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்றத்தில் எவரையும் தன்னால் சந்திக்க முடியும் என்றும், மாற்றத்திற்கு ஆதரவளிப்பவருடன் கலந்துரையாட தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில், பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அஸீஸ்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக, மலேசியாகினி வெளியிட்ட செய்தி தொடர்பில், ஊடகங்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு…

ஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும், சாபா அம்னோ…

  ஒரு டஜனுக்கு மேற்பட்ட சாபா அம்னோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இந்த மிக அண்மையச் சம்பவத்திற்கு ஸாகிட்டின் தலைமைத்துவ போக்குதான் காரணம் என்று சாபா அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கஸாலி அன்சிங் கூறுகிறார்.…

அம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம் அம்னோவைக் கலைக்க வேண்டாம்…

முகம்மட் ஹசான் தாமும் மேலும் நான்கு அம்னோ தலைவர்களும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்தது கட்சித்தாவுவதற்காக அல்ல என்று விளக்கினார். எந்தக் கட்சிக்கு இரு தசாப்தங்களுக்குமேல் தலைமை வகித்தாரோ அந்தக் கட்சியைக் கலைத்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவே தாங்கள் ஐவரும் மகாதிரைச் சென்று கண்டதாக அம்னோ…

மகாதிர்- அம்னோ தலைவர்கள் சந்திப்பு அக்டோபரில் நிகழ்ந்தது- காடிர்

பக்கத்தில் உள்ள படத்தில் நாம் பார்க்கிறோமே பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அம்னோ தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு அது அக்டோபர் 22-இல் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின். அச்சந்திப்பைக் காண்பிக்கும் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக தம் முகநூல் பக்கத்தில் கருத்துரைத்த…