தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்ரேலிய நபர் தொடர்பான வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பத்து நபர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகமட் இசா கூறுகையில், மூன்று வெளிநாட்டவர்கள்…
ரோன்95 20சென் உயரலாம்: ரபிசி எச்சரிக்கை
இவ்வாரம் ரோன்95-இன் விலை லிட்டருக்கு 10 சென்னிலிருந்து 20 சென்வரை உயரலாம் என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி எச்சரிக்கிறார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை, நேற்றிரவு சீரியாமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் இவற்றின் எதிர்வினையாக எண்ணெய் விலை உயரலாம் என்று அந்த பிகேஆர் எம்பி கூறினார்.…
1எம்டிபி எதிர்ப்பு அட்டைகளை ஏந்தி இருந்த மாணவர்களுக்கு அபராதம்
கடந்த ஆண்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விவகார இலாகா (ஜாசா) ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கூட்டத்தில் எதிர்ப்பு அட்டைகளை ஏந்தி இருந்த ஐந்து மாணவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாரா அதன் மாணவர் அரிப்பின் அமினுக்கு ரிம 200 அபராதம் விதித்து, கடும் எச்சரிக்கையும்…
ஒருதலைப்பட்சமான மத மாற்றம் சட்ட திருத்தம் செய்வதில் தாமதம், அச்சத்தில்…
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் (திருமணம் மற்றும் மண விலக்கு) (திருத்தங்கள்) மசோதா 2016 இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் அச்சம் தெரிவித்துள்ளது. சிறார்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…
பினாங்கு சட்டமன்றத்தில் ஷாபுடினை கண்டிக்கும் தீர்மானம்
தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாகயாவைக் கண்டிக்கும் தீர்மானம் பினாங்கு சட்டமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் கற்பழித்தவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நாடாளுமன்றத்தில் கூறிய ஷாபுடின் பற்றி பினாங்கு…
லெம்பா பந்தாய் தொகுதியில் புக்கிட் அமான் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு வாக்காளர்கள்…
லெம்பா பந்தாய் வாக்காளர்கள் 100 பேர் அவர்களின் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தலைமையில், அவர்களின் தொகுதியில் எல்லைத் திருத்தம் தொடர்பில் தேர்தல் ஆணையம்(இசி) முன்வைத்துள்ள இரண்டாவது பரிந்துரைக்குத் தங்கள் ஆட்சேபணைகளை இசியின் கூட்டரசுப் பிரதேச அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர். முதல் பரிந்துரைக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் …
நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது எளிய தண்டனை என்றே நூர்…
நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்து ஷா ஆலம் எம்பி காலிட் சமட்டைத் தாக்கியவர்கள் சிறு குற்றச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது குறித்து கருத்துக் கேட்டதற்கு அந்த எண்மர்மீதும் இன்னும் கனமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்க வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் கூறினார். இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் …
செய்தியாளர்கள் திருந்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஷாபுடின் எச்சரிக்கை
சிறார் திருமணம், பாலியல் வல்லுறவு ஆகியவை குறித்த தம் கருத்துகளைத் தப்பும்தவறுமாக வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார் தாசெக் குளுகோர் எம்பி ஷாபுடின் யாஹ்யா. “எல்லாவற்றையும் சரிபார்க்கப் போகிறேன். தப்பாக செய்தி வெளியிட்டிருந்தால் சம்பந்தப்பட்ட செய்தித்தாள்களுக்கும் செய்தியாளர்களுக்கும் எதிராக வழக்கு தொடுப்பேன்”, …
பிகேஆர்: ஜிஎஸ்டி-க்கு மக்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்
ஆளும் பிஎன் அரசாங்கம் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)-யைக் கொண்டுவந்து மக்களைப் பலிகடா ஆக்கியுள்ளது என பகாங் பிகேஆர் கூறுகிறது. “ஜிஎஸ்டிதான் நாட்டைக் காத்தது என்று துளியும் வெட்கமின்றிக் கூறிக்கொள்ளும் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட், நாட்டின் நிதிப் பிரச்னைகளுக்குக் காரணமான இரண்டு முக்கிய விவகாரங்களுக்கு அரசாங்கத்தால் …
ரஃபிஸி: 1எம்டிபியிடமிருந்து நிதி பெற்ற பாஸுக்கு நெருக்கமானவர் யார் என்று…
பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நிதி பெற்ற பாஸ் கட்சிக்கு நெருக்கமான தனிப்பட்ட ஒருவர் யார் என்பதை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி கூறிக்கொண்டார். அவர் கூறியிருப்பதின்படி, 1எம்டிபி பற்றிய விசாரணையை எம்எசிசி மேற்கொண்டிருந்த போது…
ரஃபிஸி: பாஸுக்கு நெருக்கமான ஒருவர் 1எம்டிபி நிதி பெற்றார்
பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி பாஸுக்கு நெருக்கமான ஒருவர் 1எம்டிபி நிதி பெற்றார் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டார். அந்தப் பணம் பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுக்கப்பட்டது என்று அவர் கூறிக்கொண்டார். இன்று பிற்பகல், நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ரஃபிஸி…
சட்டம் 355 திருத்தங்கள் மசோதா மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற…
இன்று நாடாளுமன்றத்தில் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியுடின் சட்டம் 355 திருத்தங்கள் மசோதாவுக்கான அவரது ஆதரவு பேச்சை முடித்தவுடன், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இந்த சட்ட திருத்தங்கள் மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற தொடர்கூட்டத்தில் தொடரும் என்று அறிவித்தார். பாஸ் கட்சியின் தலைவர் அப்துல்…
ஒருதலைப்பட்சமான மத மாற்றம் பற்றிய சீர்திருத்தங்கள் மசோதா தள்ளிவைக்கப்பட்டது
ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தை தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் அடங்கிய மசோதா அடுத்த நாடாளுமன்ற தொடர்கூட்டத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மணி 5.05 க்கு முடிவுற்ற நாடாளுமன்றத்தின் மிக நீண்ட கூட்டத்தில் தள்ளிவைக்கப்பட்ட ஐந்து அரசாங்க மசோதாக்களில் திருமணம் மற்றும் மண விலக்கு சீர்திருத்தங்கள் மசோதாவும்…
ஹாடியின் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது
ஷரியா நீதிமன்றங்கள் ( கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டத்திற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த திருத்தங்கள் அடங்கிய மசோதா இன்று விவாதிக்கப்படும். அந்த மசோதா நாடாளுமன்ற நடவடிக்கை பட்டியலில் இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. விவாதம் இன்று மதியம் மணி 12.00 க்கு…
பினாங்கிற்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் தொகுதி நிர்ணய முன்மொழிதல்
தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தொகுதி நிர்ணயத்தில் சில "புதிய, அதிர்ச்சி அளிக்கும் மற்றும் குழப்பம் உண்டாக்குகிற" தகவலை மாநில அரசு கண்டுள்ளதாக பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். அந்தத் தகவல் அடிப்படையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாநில ஆட்சிக்குழு…
பெட்ரோல் விலை 3 சென் கூடுகிறது, டீசல் 3 சென்…
ரோன்95 மற்றும் ரோன் 97 எரிபொருள் விலை இன்று நள்ளிரவிலிருந்து ஒரு லீட்டருக்கு 3 சென் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ரோன்95 பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.16 க்கும் ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு ரிம2.44 க்கும் விற்கப்படும். சின் சியு டெய்லி நாளிதழ்…
மீடியாகோர்ப் நஜிப்பிடம் மன்னிப்பு கேட்டது
சிங்கப்பூரின் மீடியாகோர்ப் சேனல் 5, அதன் ‘Ok Chope!’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனம் புண்படும் கருத்துகள் இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. “சேனல் 5ம், Ok Chope! நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவும் கடந்த வார Ok Chope! நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் நஜிப் பற்றிப் பேசப்பட்டதற்கு …
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் 5 விழுக்காட்டு இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு
அரசாங்க உயர்க் கல்விக் கழகங்களில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல் துறைகளில் 5 விழுக்காடு இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்குக் கொடுக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. நாட்டைக் கல்வி மையமாக்கும் முயற்சியின் தொடர்பில் இம்முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். முன்சொன்ன மூன்று துறைகளிலும் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள்(ஐபிடிஏ) …
பாரஸ்ட் சிட்டியில் வீடு வாங்கிய சீன நாட்டவருக்குப் பணம் திருப்பிக்…
பாரஸ்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனம், அதன் மேம்பாட்டுத் திட்டத்தில் வீடு வாங்கிய சீன நாட்டவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க தயாராகி வருகிறது. சீனா கெடுபிடிமிக்க மூலதனக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணமாகும். “நாங்கள் சீனாவில் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டோம்”, என கண்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் உதவித் தலைவர் …
‘பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரையே மணப்பதா’: எம்பியின் பேச்சால் அமைச்சர் அதிர்ச்சி
பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியவர்களையே மணக்கலாம் என்ற கருத்து அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறார்கள் மீது மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பிஎன் தேசேக் குளுகோர் எம்பி ஷாபுடின் யாஹ்யாவின் அப்படியொரு கருத்தை முன்வைத்தார்.…
சாலே: மலேசிய பொருளாதாரத்தைக் கீழறுப்பது நாட்டுப்பற்றல்ல
அன்னிய முதலீட்டாளர்களை பயமுறுத்தி விரட்டுவது நாட்டுப்பற்றுள்ள செயல் அல்ல, அது தேசத் துரோகம் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். “சிலர் கூறிக்கொள்கிறார்கள் நாட்டுப்பற்றின் காரணமாகத்தான் பிரதமரையும் நாட்டையும் குறைகூறுவதாக. “அடோல்ப் ஹிட்லர்கூட நாட்டுப்பற்றுள்ளவர்தான். அந்த நாட்டுப்பற்றிலிருந்து உருவானதுதான் நாஸிஸம். அதனால் 100 மில்லியன் …
கற்பழிப்பிற்குப்பின் கல்யாணம்: தீர்ந்தது சமூகப் பிரச்சனைகள், பிஎன் எம்பி கூறுகிறார்
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் கற்பழித்தவனுக்கும் திருமணமாகிவிட்டால் அது சமூகப் பிரச்சனைகளுக்கு ஒரு சாத்தியமான தீர்வாக அமையும் என்று ஒரு பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மக்களவையில் கூறினார். கற்பழிப்பு ஒரு கிரிமினல் குற்றம் என்று கூறிய அந்த பிஎன் எம்பி ஷாபுடின் யாஹயா (பிஎன் - தாசெக் கெலுகோர்),…
ஜாஹிட் விவாதம் இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வார்
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசுக்குமிடையிலான விவாதம் இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணங்களை முதலில் ஆராய்வார். விவாதத்தை அனுமதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குமுன் உள்துறை அமைச்சு அதைச் செய்ய வேண்டியிருப்பதாக அவர் …
ஹாடி: ஒருதலையான மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்வீர்
நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, 1976 சட்ட சீரமைப்பு (திருமணம், மணவிலக்கு)ச் சட்டம் அல்லது சட்டம் 164இன் உத்தேச திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கோரிக்கை விடுத்துள்ளார். சிவில் திருமணத்தைக் கட்டுப்படுத்தும் அச்சட்டம், சிவில் நீதிமன்றத்தில் ஒரு முஸ்லிமின் …