குதிரையேற்றம், நீச்சல், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டேக்வாண்டோ ஆகியவற்றில் பயிற்சி அல்லது வகுப்புகளுக்கான கட்டணம் செலுத்தினால், அடுத்த ஆண்டு முதல் ரிம 1,000 வரை வரிச் சலுகை கிடைக்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் கூறினார். விளையாட்டு மேம்பாட்டுச் சட்டம் 1997 (சட்டம் 576)…
தைப்பூச திருவிழாவன்று அமைதியும் நல்லிணக்கமும் ஓங்கச் செய்வீர், குலசேகரன்
தைப்பூசத் தினத்தன்று தண்ணீர் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஈப்போ பாரட் குழு செய்து முடித்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக தைப்பூச விழாவிற்கு ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் தண்ணீர் மற்றும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. ஈப்போ பாரட்டின் தண்ணீர் பந்தல் காலை மணி…
“மலேசியாவைப் பாதுகாப்போம்” சந்திப்புக்கு நஜிப் அழைக்கப்பட்டிருப்பது புதிய துவக்கத்திற்கான வாய்ப்பு,…
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் "மலேசியாவைப் பாதுகாப்போம்" வட்ட மேசை மாநாட்டிற்கு நஜிப் ரசாக் அழைக்கப்பட்டிருப்பது பிரதமருக்கு ஒரு புதிய துவக்கத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் என்று லிம் கிட் சியாங் கூறுகிறார். ஊழல் மிகுந்த நாடு என்று உலகளவில் மலேசியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை அகற்றுவதற்கு ஒரு புதிய…
தூக்கிலிடப்படவிருக்கும் மகனைக் காப்பாற்றக் கோரி கண்ணீர் விடும் தாய்
மலேசியரான கே. தட்சணமூர்த்தி சிங்கப்பூருக்கு போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டணை விதித்து தீர்ப்பள்ளித்துள்ளது. தமது ஒரே மகனை தூக்கிலிருந்து காப்பாற்றும்படி தாயார் எ. லெட்சுமி மலேசிய அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார். "நான் எனது மகனுக்காக மட்டும் கேட்கவில்லை. அங்கே மரண தண்டணையை…
எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் முறையைத் தெரிவிப்பீர்: அரசாங்கத்திடம் மசீச வலியுறுத்து
அரசாங்கம் எரிபொருள் விலை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்கிட வேண்டும் அப்போதுதான் எதிரணியினர் பொதுமக்களுக்குத் தப்பான தகவல்கள் கொடுப்பதைத் தடுக்க முடியும் என்கிறது மசீச. எரிபொருள் விலை உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான முறையில் நடந்து கொண்டால் எதிரணியினர் “உண்மைகளைத் திரித்துக் கூற வாய்ப்பு கிடைக்காமல் போகும்” …
சரவாக் சீனர்களின் குடியுரிமை பிரச்னைகளுக்குத் தீர்வு காண பணிக் குழு
சரவாக்கில் உள்ள மலேசிய சீனர்கள் குடியுரிமை பெறுவதற்கு உதவ சிறப்புப் பணிக் குழு ஒன்று அமைக்கப்படும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று கூறினார். அப்பணிக்குழு சரவாக் தேசியப் பதிவுத்துறையின்கீழ் செயல்படும் என்றாரவர். “குடியுரிமை இல்லாப் பிரச்னைமீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. அப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி …
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் டிஏபியில் சேர்வாராம்
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் தீவிர அரசியலுக்குத் திரும்பிவர ஆயத்தமாகிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இதை அவர் சொல்லவில்லை அவருக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன, ஜைட் அடுத்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் அதன் தொடர்பில் ஓர் அறிவிப்பைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வில் முன்னாள் …
சூதாட்டம் நடத்துவோரை ஒன்றும் செய்ய இயலாது: தடுத்து வைக்கப்பட்ட ஜமால்…
சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், விசாரணைக்காக ஐந்து நாள் தடுத்து வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 29-இல் , அம்பாங் தாமான் கோசாஸில் சூதாட்ட மையங்கள் செயல்படுவதாகக் கூறி அதிரடியாக அம்மையங்களுக்குள் நுழைந்து சோதனைகளை நடத்தியதற்காக நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மெஜிஸ்ட்ரேட் முகம்மட் …
பெப்ரவரி 8 இல், தைப்பூச ரத ஊர்வலங்களுக்காக பல சாலைகள்…
தைப்பூச திருவிழாவில் வெள்ளி மற்றும் தங்க ரத ஊர்வலங்கள் நடத்துவதற்கு ஏதுவாக பெப்ரவரி 8 இல் பினாங்கில் பல சாலைகள் மூடப்பட்டு பின்னர் படிப்படியாக திறக்கப்படும். இரு ரத ஊர்வலங்கள் புறப்பட்டு திரும்பி வரும் நேரங்களையும் அவை பயன்படுத்தும் சாலைகளின் பெயர்களையும் பட்டியலிட்ட திமோர் லாவுட் மாவட்ட…
கெராக்கான் இளைஞர்கள்: பினாங்கைக் கூட்டரசு பிரதேசமாக்கலாம் என்பது ஆட்சியாளரை அவமதிப்பதாகாது
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பினாங்கைக் கூட்டரசுப் பிரதேசமாக்கலாம் என்று பரிந்துரைத்தது அம்மாநில ஆளுனரை அவமதிப்பதாகாது என கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் கூறினார். தெங்கு அட்னான் அப்படிச் சொன்னது ஆளுனரை அவமதிப்பதாகும் என டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் …
நாடாளுமன்றத்தில் கலவரம் செய்த துணை அமைச்சரின் மகன் நீதிமன்றத்தில் குற்றம்…
துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானின் மகன், பிர்டுஸ் தாஜுடின் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கலவரம் செய்ததற்காக நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். அவருடன் மேலும் எழுவரும் குற்றம் சாட்டப்படுவார்கள் என கோலாலும்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் கூறினார். மூன்று பெண்கள் உள்பட, அந்த எண்மரும் 33 …
அனுவார் நாடு திரும்பியவுடன் எம்ஏசிசி-யைச் சந்திப்பார்
அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா இன்றிரவு நியு சிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார். திரும்பியதும் முதல் வேலையாக அவர் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தைச் சந்திப்பார். நேற்றிரவு முகநூலில் இதைத் தெரிவித்த முன்னாள் மாரா தலைவருமான அனுவார், ஊழல்தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருப்பதாகக் கூறினார். “10-மணி நேரப் பயணத்துக்குப்பின் சோர்வாக …
ஈப்போவைச் சுத்தப்படுத்த துப்புரவு தொழிலாளர்களுடன் கைகோத்த எம்பி
பேராக் மந்திரி புசார் ஜம்ரி காடிர் வேலையில் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார். அதை நிரூபிப்பதுபோல் இன்று காலை அவர் துப்புரவுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஈப்போ நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். “காலை 6.45க்கு, நகரைச் சுற்றிலும் குப்பைகளை அள்ளுவதற்காக நான் ஈப்போ மாநகர் மன்ற(எம்பிஐ) ஊழியர்களுடன் …
பாஸ்- பெர்சத்து ஒத்துழைப்பை பிகேஆர் வரவேற்கிறது
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வும் பாஸும் ஒத்துழைப்புக்காக செய்து கொண்டிருக்கும் ஏற்பாட்டை சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி வரவேற்றுள்ளார். பெர்சத்து, பாஸ் கட்சிகள் முதிர்ச்சியுடனும் தலைமைத்துவ பாங்குடனும் மலேசியர் அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார். பாஸ், பெர்சத்து கட்சிகளின் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் எதிர்வரும் …
அமைச்சரின் முன்னாள் உதவியாளர்மீது ஊழல் குற்றச்சாட்டு
ஹிஷாமுடின் உசேன் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவருக்குச் சிறப்பதிகாரியாக பணியாற்றியவர்மீது இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது. 2014 பிப்ரவரிவரை ஹிஷாமுடினிடம் பணியாற்றிய சைலான் ஜவுஹாரி, 2014 ஜனவரியில் ரிம80,000 கையூட்டு பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இரண்டு நிறுவனங்களுக்கு பள்ளிகளைத் …
சேவியர்: இந்தியச் சமுதாயத்தின் நன்மையைக்கருதி உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக்…
இந்தியர்களின் பிரச்சனையைக் காதுகொடுத்துக் கேட்டுத் தீர்க்கத் தாங்கள் தயார் என்று மஇகா சார்பில் அறிவித்திருக்கும் டத்தோ முனியாண்டி, உண்மையாக, நேர்மையாக இச்சமுதாயத்தின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வுகான வேண்டும் என்ற உளப்பூர்வமான எண்ணத்துடன் இந்தியச் சமுதாய விவகாரங்களை அணுக வேண்டும் என்று ஆலோசனை கூறினார் கெஅடிலான் கட்சியின் தேசிய…
தலைவர்கள் கலந்துகொள்ளாத பாஸ்-பெர்சத்து சந்திப்பு
இன்று கோலாலம்பூர், பங்சாரில் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளும் ஒரு கூட்டத்தை நடத்தின. அக்கூட்டத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட்டும் அங்கு இல்லை. கிடைத்த தகவலின்படி, பெர்சத்துவை அதன் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் பிரதிநித்தார். அவரே கூட்டத்திற்கும்…
பயணத்தடை பட்டியலில் மலேசியா இல்லை, அமெரிக்கத் தூதரகம் விளக்கம்
அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்த நாடுகளில் மலேசியா ஒன்றல்ல எனக் கோலாலும்பூரில் அமெரிக்கத் தூதரகம் இன்று உறுதிப்படுத்தியது. “கடந்த வாரம் அதிபர் வெளியிட்ட பயணத்தடை ஆணையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா இல்லை. “மலேசியர்கள் விசா பெற்று அமெரிக்காவுக்குத் தொடர்ந்து பயணம் செய்து வரலாம்…
பாஸ்: ஊழல் இல்லை என்ற கூ நானின் கூற்று அனுவாரின்…
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் துங்கு மன்சூர் தங்கள் கட்சியில் ஊழல் இல்லை என்று கூறிக்கொண்டிருந்ததை அனுவார் மூசா மீது நடக்கும் விசாரணை பொய்யாக்கியுள்ளது என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். “அக்காணொளியை(தெங்கு அட்னான் பேசுவதை)க் காண்போருக்குச் சிரிப்புத்தான் வரும். அதற்குக் …
வார்ட் கட்டண உயர்வால் ஏழை மக்களுக்குப் பாதிப்பில்லை
அரசாங்க மருத்துவமனைகளின் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் உத்தரவாதம் அளித்துள்ளார். ஏனென்றால், மூன்றாம் வகுப்பு வார்ட் கட்டணம் ஒரு நாளைக்கு ரிம3-தான் அதில் மாற்றமில்லை என்றாரவர். முதல், இரண்டாம் வகுப்பு வார்ட் கட்டணங்கள் நீண்ட காலமாக மாற்றமின்றியே …
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோது பெட்ரோல் விலை உயர்ந்தது ஏன்?…
உலக அளவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை ஜனவரியில் சற்றுக் குறைந்துள்ள வேளையில் அரசாங்கம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 20 சென் உயர்த்தியது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்கிறார்கள் எதிரணித் தலைவர்கள். மலேசியர்கள் சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கழித்து விட்டுத் திரும்பிய வேளையில் …
இன்றிரவிலிருந்து பெட்ரோல் விலை 20 சென் உயர்வு
இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் விலை 1 லீட்டருக்கு 20 சென் உயர்வு காண்கின்றது. இதனால் ரோன்95இன் விலை ஒரு லீட்டர் ரிம2.30 க்கும், ரோன்97இன் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.60 க்கும் விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டர் ரிம2.15 க்கு விற்கப்படும்.…
ஹராபான் ஏற்பாடு செய்துள்ள ‘முஸ்லிம் தடை’ கண்டனக் கூட்டத்தில் பாஸ்,…
வெள்ளிக்கிழமை, கோலாலும்பூரில், அமெரிக்கத் தூதரகக்கு வெளியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்திருப்பதற்கு எதிராக பக்கத்தான் ஹராபான் ஏற்பாடு செய்துள்ள கண்டனக் கூட்டத்தில் பாஸ், அம்னோ இளைஞர் பிரிவுகள் கலந்துகொள்ள மாட்டா. “எதிரணி ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் நாங்கள் …
எம்பி: ஏஜியின் மேல்முறையீட்டை விசாரணை செய்ய அவசரம் காட்டப்படுவது ஏன்?
தேர்தல் ஆணையம் (இசி) சார்பில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செய்துள்ள மேல்முறையீட்டை விசாரிப்பதற்கு முறையீட்டு நீதிமன்றம் அவசரம் காட்டுவது ஏன் என்று லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் வினவுகிறார். வழக்கமாக, ஒரு மேல்முறையீடு பதிவு செய்யப்பட்டதும் அதை விசாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் கழித்து ஒரு தேதி …