தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மூடா மற்றும் பெர்சத்து விளக்கம் கோரியுள்ளனர். தனி அறிக்கைகளில், மத ஆலோசகர் வான் ஜி வான் ஹுசினின் கூற்றுக்கள் முன்னாள் தலைவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட குற்ற…
பக்கத்தான் ஹராபானும் பக்கத்தான் ரக்யாட்டும் ஒருங்கிருந்து செயல்படுவது சாத்தியமே
பக்கத்தான் ஹராபான் பக்கத்தான் ரக்யாட் இரண்டுமே ஒருங்கிருந்து செயல்படுவது முழுக்க முழுக்க சாத்தியம்தான் என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். 1990-இல் அம்னோவிலிருந்து பிரிந்துசென்ற செமங்காட் 46 (எஸ்46) வெவ்வேறு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டதை அந்த கோட்டா பாரு எம்பி சுட்டிக்காட்டினார். எஸ்46, கிளந்தானில் பாஸுடன் …
மக்கள் அடுத்த ஆண்டில் செலுத்தப்போகும் கூடுதல் வரி ரிம13 பில்லியன்
அடுத்த ஆண்டில் மக்கள் ரிம13 பில்லியனைக் கூடுதல் வரியாகச் செலுத்துவார்களாம். பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கூறுகிறார். பொருள் சேவை வரி, கலால் வரி, தனிப்பட்டவர் வருமான வரி, நிறுவன வரி என்ற வகையில் இந்த வரி வசூலிக்கப்படும். “பலர் நினைக்கலாம் நிறுவன வரியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதில்லை என்று.…
பெர்சே: பெசாகாவின் ‘போர்’ முழக்கம் பொது ஒழுங்குக்கு ஒரு மிரட்டல்
யாராவது சவால் விடுத்தால் “போரிடவும்” தாங்கள் தயார் என்று தேசிய சீலாட் கூட்டமைப்பு(பெசாகா)த் தலைவர் அலி ருஸ்தம் மிரட்டியிருப்பது பொது அமைதிக்கு ஒரு மிரட்டல் என்பதால் அதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என பெர்சே வலியுறுத்தியது.. நேற்றிரவு சீலாட் நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவ்வாறு கூறிய அலி, மலாய்க்காரர்கள் …
இப்போதைக்கு ஐஎஸ்ஏ திரும்ப வராது
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் திரும்ப கொண்டு வரப்படப்பட வேண்டும் என்ற பிஎன் எம்பியின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது. அதைத் திரும்பக் கொண்டுவரும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனச் சட்ட அமைச்சர் நன்சி சுக்ரி தெரிவித்தார். “நடப்புச் சட்டஙகளே கடுங் குற்றங்களைச் சமாளிக்கப் போதுமானவை”, என்றாரவர். டத்தோ அப்துல் ரஹ்மான்…
பிரதமரின் விமானத்துக்கு ஆறு மாதங்களில் ரிம40.8மில்லியன் செலவானது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயன்படுத்தும் ஜெட் விமானத்துக்கு வாடகை, பராமரிப்புச் செலவு, பயணச் செலவு என ஆறு மாதங்களில் ரிம40.8 மில்லியன் செலவானதாக பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கூறினார். அந்த ஏசிஜே320 ஜெட் 2015 ஏப்ரலுக்கும் செப்டம்பருக்குமிடையில் 42 தடவை பறந்திருப்பதாக பிகேஆர் உதவித் தலைவருமான …
பிஏசிக்கு ஐந்து புதிய உறுப்பினர்கள் நியமனம்
நாடாளுமன்ற தேர்வுக் குழு பொதுக் கணக்குக்குழுவுக்கு ஐந்து எம்பிகளை நியமித்துள்ளது. நால்வர் பிஎன் எம்பிகள். அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்குப் பதிலாக இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாஸ், கட்சிதாவிய தன் உறுப்பினர் ஒருவருக்குப் பதிலாக புதிதாக ஒருவரை நியமித்துள்ளது. புதிதாக பிஏசி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பிஎன் எம்பிகள் வருமாறு: ஜாசின் எம்பி அஹ்மட் …
குற்றவியல் சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது: உள்துறை அமைச்சர் உறுதி கூறினார்
கீழறுப்பு, வேவுபார்த்தல், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் அதிகார அத்துமீறல் நிகழாது என புத்ரா ஜெயா உத்தரவாதம் அளிக்கிறது. குற்றம்சாட்டப்படுவோர்மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படும்போது அவர்கள் எதிர்வாதம் செய்ய இடமுண்டு என்பதால் அதிகார அத்துமீறல் நிகழ வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அஹ்மட் …
அலி ருஸ்தாம்: சவால் விடுக்கப்படுமானால், சீலாட் போருக்குத் தயார்
சவால் விடுக்கப்படுமானால் போரிடத் தயார் என்று பெசாக்கா (தேசிய சீலாட் பெடரேசன்) தலைவரும் சிவப்புச் சட்டை பேரணி ஏற்பாட்டாளருமான முகமட் அலி ருஸ்தாம் இன்று கூறினார். மலாய் இனம், இஸ்லாம் மற்றும் நாட்டின் தலைவர்களின் கௌரவத்தை தற்காப்பதற்காக கோலாலம்பூரில் இன்னும் மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுதான் செப்டெம்பர்…
குவான் எங்: மக்களிடமிருந்து ரிம26ஐ எடுத்துக்கொண்டு ரிம1ஐ திருப்பித்தரும் பட்ஜெட்…
அரசாங்கம் நெருக்கடிலிருந்து தப்பித்துகொள்வதற்கு வாணிபத்துறை மீது வரி விதிக்காமல் மக்கள் மீது வரி விதித்துள்ளதை பட்ஜெட் 2016 ஒப்புக்கொள்கிறது. அரசாங்கம் திவாலாவதிலிருந்தும் அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போவதிலிருந்தும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அரசாங்கத்தைக் காப்பாற்றியிருப்பதை பட்ஜெட் 2016 ஒப்புக்கொள்வதை ஊடகங்கள் பரவலாக…
இசா: நஜிப் பதவி விலகக் கோரிய கிளைகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டன
13 நெகிரி செம்பிலான் அம்னோ கிளைகள் பிரதமர் நஜிப் கட்சியின் தலைவை பதவியைத் துறக்க வேண்டும் என்று கோரியுள்ள தீர்மானம் அம்னோவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தை மீறியதாகும். அந்த அம்னோ கிளைகள் அவற்றின் கருத்தை சமீபத்தில் நடைபெற்ற அம்னோ பேராளார்கள் கூட்டத்தில் கூறியிருக்க வேண்டும். அக்கூட்டத்தில் நஜிப்புக்கு முழு…
ஸுரைடா: ‘ராவாங் திட்டம்’ என்பது அம்னோவின் கட்டுக் கதை
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியைப் பதவியிலிருந்து வெளியேற்ற ‘லங்கா ராவாங்’ என்ற பெயரில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் மகளிர் தலைவி ஸுரைடா கமருடின் நிராகரித்தார். முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லாவை பிகேஆர் தன் பக்கம் இழுத்துக் கொண்டதை அடுத்து இப்படிப்பட்ட வதந்தி …
அன்வாரின் உடல்நலன் பற்றி அறிய சுஹாகாம் சிறைக்கு வருகை
அன்வார் இப்ராகிமின் உடல்நலன் பற்றிப் புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையம்(சுஹாகாம்) சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்தது. அக்டோபர் 2-இல் Otai Reformasi என்ஜிஓ கொடுத்த மகஜரை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கை பூலோ சிறைச்சாலை சென்று அன்வாரைக் கண்டதாக சுஹாகாம் ஓர் அறிக்கையில் கூறியது. சுங்கை …
கட்சியைக் காப்பாற்ற நஜிப் பதவி விலக வேண்டும் என நெகிரியில்…
2016 பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு புறம் பாராட்டப்படும் வேளையில் நெகிரி செம்பிலானில் 13 அம்னோ தொகுதிகள் அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களுக்குத் தலைமை ஏற்றுள்ள தாமான் டிகேகே தொகுதித் தலைவர் கமருல் அஸ்மான் ஹபிபுர் …
அஸ்மின்: பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் 2016, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடாது உண்மையில் அதை மந்தப்படுத்தி விடும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார். “பட்ஜெட் 2016 மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் உந்து சக்தியைக் …
பிரதமர் பட்ஜெட் உரையை முடித்தவுடன் எழுந்த கேள்வி “ரிம2.6 பில்லியன்…
நிதி அமைச்சர் நஜிப் ரசாக் 2016 ஆம் ஆண்டுக்காண பட்ஜெட் உரையை 90 நிமிடங்களுக்கு நிகழத்தி முடித்தவுடன், நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் ஒன்றாக அட்டையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றனர். அந்த அட்டையில் "ரிம2.6 பில்லியன் எங்கே?" என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அவையில் குழப்ப நிலை ஏற்பட்டது.…
சீனச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்குக் குடிநுழைவுத் துறை காரணமல்ல
சீனச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிய தயக்கம் காட்டுவதற்கு விசாவைக் காரணம் காட்டி குடிநுழைவுத் துறைமீது பழி போடுவது நியாயமல்ல என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் கூறினார். விசா ஒரு பிரச்னையே அல்ல என்று கூறிய அதற்கு வேறு காரணங்கள் உள்ளன என்றார். “விசா கட்டணம் …
அஸ்மின்: என்னை வெளியேற்ற ராவாங் திட்டமா? அப்படி எதுவும் கிடையாது
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, தமக்குப் பதிலாக அண்மையில் பிகேஆரில் இணைந்த சைபுடின் அப்துல்லாவை “ராவாங் திட்ட”த்தின்வழி மந்திரி புசாராக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். Babab.net என்னும் வலைப்பதிவு ராவாங் திட்டம் அஸ்மினைப் பதவியிலிருந்து அகற்றும் நோக்கம் கொண்டது எனக் கூறியிருந்தது. “அதென்ன ராவாங் திட்டம்?…
கிட் சியாங்: 1எம்டிபிக்கு அடுத்த பலி மகாதிரா?
முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்டே 1எம்டிபி-இன் அடுத்த “பலி” என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஆருடம் கூறியுள்ளார். “1எம்டிபி அரக்கனுக்கு இப்போது பலியாகியிருப்பது நான். அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மகாதிர் உள்பட பலர் பலியாவார்கள்”, என லிம் அறிக்கை ஒன்றில் கூறினார். கடந்த ஆண்டு …
கிட் சியாங் இடைநீக்கத்தை எதிர்த்து எதிரணி முறையீடு
கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் இடைநீக்கம் செய்யப்பட்டதை மீள்ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை எதிரணி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். இடைநீக்கம் செய்யப்பட்டதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராய அத்தீர்மானம் கொண்டுவரப்படுவதாக பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறினார். “எங்களைப் பொறுத்தவரை …
கிட் சியாங் ஆறு மாத இடைநீக்கம்
லிம் கிட் சியாங் (டிஏபி- கேளாங் பாத்தா) மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவை அவமதித்து விட்டார் என்று அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்தீர்மானத்தை பிஎன் எம்பிகள் 107 பேர் ஆதரித்தனர். எதிரணியினர் 77 பேர் எதிர்த்தனர். அதன் பின்னர் லிம் …
ரசாலி: பிரதமரை வெளியேற்ற நினைக்கும் பிஎன் எம்பிகள் பட்ஜெட்டுக்கு எதிராக…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்றுவது அவசியம் என்று பிஎன் எம்பிகள் நினைத்தால் 2016 பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்கிறார் அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா. “வழக்கப்படி பார்த்தால் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பாக அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்தான். “ஆனால், எதிர்ப்பு பிரதமருக்குத்தான் பட்ஜெட்டுக்கு …
கல்வி அமைச்சிடம் புகைமூட்டத்துக்கு எதிராக உருப்படியான திட்டம் இல்லை
கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட், “எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்கும்” திட்டங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும் அமைச்சு அவ்வப்போதைய நிலவரங்களுக்கு ஏற்ப செயல்படுதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்று பினாங்கு அரசு குறைகூறியது. “ஏ பிளான், பி பிளான், சி பிளான் என்று எஸ்பிஎம் வரை அமலாக்குவதற்குத் திட்டங்களைக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.…
1எம்டிபி நிதி அறிக்கையில் திருத்தம் செய்யவில்லை
அரசின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, 2014ஆம் ஆண்டுக்கான அதன் நிதி அறிக்கையில் திருத்தங்கள் எதையும் செய்யவில்லை என நிதி அமைச்சு கூறியது. 1எம்டிபி, தணிக்கை செய்யப்பட்ட அதன் நிதி அறிக்கையைத் திருத்தி இருந்ததா என்று வினவிய டோனி புவா(டிஏபி- பெட்டாலிங் ஜெயா உத்தாரா)வுக்கு கொடுத்த எழுத்துப்பூர்வமான பதிலில் நிதி …