நஜிப்பும்-ஸாஹிட்டும் ஏன் முஹிடினிடம் கெஞ்சினர்?

இராகவன் கருப்பையா- உலகையே உலுக்கிய மேகா ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிபும் அவருடைய அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த அஹ்மட் ஸாஹிட்டும் தன்னிடம் வந்து மன்றாடியதாக முன்னாள் பிரதமர் முஹிடின் அம்பலப்படுத்தியது தேசிய அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிரடி அறிவிப்பில் உண்மை…

எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான அரசின் திட்டம் என்ன? -ஓங் கியான்…

ஒரு வாரத்திற்கு முன்பு, பிப்ரவரி 8, 2022 அன்று, தேசிய மீட்பு கவுன்சிலின் (NRC) தலைவர் முஹிடின் யாசின், மார்ச் மாத தொடக்கத்தில்  நாட்டின் எல்லைகளை திறக்க கவுன்சில் முன்மொழிந்ததாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் உட்பட என்.ஆர்.சி.யின் அமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர் தெங்கு…

இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்)…

போலீஸ் காவலில் 7 இறப்புகள் : விசாரணை நடத்தி ஐ.பி.சி.எம்.சி.…

2022-ம் ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில், போலிஸ் தடுப்புக்காவலில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்து, 50 சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இன்று (11.02.2022), புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் வழங்கிய குறிப்பாணையின் முழு விவரம் பின்வருமாறு :- போலிஸ் காவலில் நிகழ்ந்த இறப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு…

குற்றவாளிக்குத் தண்டனை இல்லை – அம்பலப்படுத்தினால் தண்டனை

இராகவன் கருப்பையா -நம் நாட்டில், ஒரு குற்றத்தை அம்பலப்படுத்துவோர் அனாவசியமாக அழைத்து விசாரணை செய்யப்படுவதும் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்படுவதும் புதிய விசயம் ஒன்றுமில்லை. இத்தகைய சூழலில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சிக்கித் தவிப்பது காலங்காலமாக இயல்பாகிவிட்ட ஒன்றாகவே தெரிகிறது. 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல' பல…

பதவிகளுக்கான அரசியல் போரட்டத்தில் பலியாகுவது சாதரண மக்களே!

கி.சீலதாஸ் - மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப்…

திக்கற்ற நிலையில் ஏழ்மை இந்தியர்கள் – அரசாங்கம் தலையிட வேண்டும்

கா. ஆறுமுகம் - கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வாழும் இவர்களின்  வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மேலோட்டமாக பார்த்தாலே போதும் கீழ்மட்டத்தில் இருக்கும் இந்தியர்கள் திக்கற்ற நிலையில் உள்ளது தெரியும். இந்தியர்களை…

ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்

ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.…

கேலிக் கூத்தாகியுள்ளது அஸாம் பாக்கி மீதான ஊழல்!

இராகவன் கருப்பையா- ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்று என அனைத்துலக ரீதியில் முத்திரை குத்தப்பட்டுள்ள  மலேசியா அப்பட்டமான ஒரு ஊழல் விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு அஸாம் பாக்கி தொடர்பான சர்ச்சையை விட வேறு சிறப்பான உதாரணம் ஏதும் இருக்க முடியாது. இவ்விவகாரம் தொடர்பாகச் சுடச்சுட அன்றாடம் வெளியாகும்…

நிலத்தை மீட்டது விவேகானந்தப் பள்ளிவாரியம், மேல்முறையீட்டில் விவேகானந்த ஆசிரமம் தோல்வி!

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்தத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாகக் கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி விவேகானந்த ஆசிரமத்தின் மீது அந்தப் பள்ளியின் வாரியத்தினர் 2019-இல் வழக்கு தொடுத்தனர். அந்த…

வெள்ளப் பிரச்சினை: மக்கள் மீது பழியா?

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு மக்களவைக் கூட்டத்தின் போது வெள்ளப் பேரிடர் தொடர்பாகப் பிரதமர் சப்ரி ஆற்றிய உரை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் வேதனைக்குள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். அப்பேரிடரை எதிர்கொண்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் அதனாலான குளறுபடிகளும் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பையும சங்கடத்தையும் ஏற்படுத்தியது…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 3

கி.சீலதாஸ் - இந்த உண்மைகளை மறந்து செயல்படுவோரைத்தான் நாம் காண்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையை மறைப்பதில் காட்டும் உற்சாகம் கல்வி தரத்தில் முன்னேற்றம் காண முற்படாதது வரலாற்றுக்கும், ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கும் மரியாதை செலுத்த மறுக்கும் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் இலக்கியவாதி சினுவா அச்சிபே நினைவுகூர்ந்தார். இன்று மட்டுமல்ல…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 2

கி.சீலதாஸ் -   வரலாறு யாரால் எழுதப்படுகிறது? வெள்ளையர்களின் ஆட்சியின்போது வெற்றி கண்ட வெள்ளையர்களே வரலாறு எழுதினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பெருமையை, வரலாற்று உண்மைகளை மறைத்து பொய்மைக்கு முதலிடம் தந்தார்கள். இன்று உலக நாடுகள் தங்களின் உண்மையான வரலாறு என்ன என்ற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 1

கி.சீலதாஸ் - நைஜீரியாவின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர் சினுவா அச்சிபே (1930-2013) பத்திரிக்கை நேர்காணலின்போது, “சிங்கங்கள் தங்களுக்கெனச் சொந்த வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டிருந்தாலன்றி வேட்டையாடல் வரலாறு வேட்டைக்காரனையே பெருமிதப்படுத்தும்" என ஓர் அற்புதமான வாய்மொழியைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக கருப்பர்களை ஏளனமாகப் பேசுவது, சித்தரிப்பது வழக்கமாக இருந்தது. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு…

மலேசியப் பூப்பந்து வானில் பூத்திருக்கும் தாரகைகள்!

இராகவன் கருப்பையா - கடந்த 70ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் நம் நாட்டின் பூப்பந்துத் துறையில் கொடி கட்டிப் பறந்த பஞ்ச் குணாளன் மற்றும் ஜேம்ஸ் செல்வராஜ் ஆகிய இரு ஜாம்பவான்களையும் நம்மில் நிறையப் பேர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் பூப்பந்து விளையாட்டு சீனர்களால் ஆதிக்கம்…

நாட்டின் நாசத்துக்கு – ஊழலும், அரசியல்வாதிகளும் காரணம் – கி. சீலதாஸ்

நாட்டில் நேர்மையான, திறமையுடைய, ஊழலற்ற நிர்வாகம் தேவை என்பது மனித குலத்தின் எதிர்பார்ப்பாகும். பொதுவாகவே நிர்வாகம் எனும்போது அது அரசின் பல துறைகளைக் குறிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் தற்காப்பு, நாட்டினுள் சட்ட ஒழுங்கு, மக்களிடையே முரண்பாடும், பூசலும் இல்லாத வாழ்வு எனப் பற்பல இலக்குகளை அடையும் நோக்கத்துடன்தான்…

அச்சத்தை அதிகரிக்கும் தடுப்பூசி குளறுபடிகள்! – இராகவன் கருப்பையா

நாட்டின் மக்கள் தொகையில் 98 விழுக்காட்டினருக்கும் மேல் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அரசாங்கப் புள்ளி விவரங்கள் காட்டுகின்ற போதிலும் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் மரண விகிதத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. கடந்த சில வாரங்களாக நாடு முழுமைக்கும் தினந்தோறும் சராசரி 3000 பேர் கோறனி நச்சிலினால்  பாதிக்கப்படுகின்றனர். அதே…

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாட்ட வழிமுறைகள்

எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨௰௫௩ (2053), தை மாதம் (சுறவம்) 1ஆம் நாள், வெள்ளிக்கிழமை நன்னாளில் பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டையும் பொங்கல் திருநாளையும் மதம் கடந்து பண்பாட்டு அடையாளத்துடன் கொண்டாட மலேசியா மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரும் அணியமாகிக் கொண்டிருக்கிறோம்.தமிழர் வானியல் கணிதமுறைப்படி சூரியன் சுறவ ஓரைக்குள் (தை மாதம்)…

‘பல்லில்லா புலி’யானது புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராகவன் கருப்பையா -கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி அவசர அவசரமாகச் செய்த முதல் காரியம் எதிர் கட்சிக் கூட்டணியை அரவணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுதான். இதன் வழி தனது சிறுபான்மை அரசாங்கத்தை தற்காத்துக்கொண்ட சப்ரி, அம்னோவின் ஊழல்வாதிகளின் நெருக்குதலில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு…

தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டனர். டிசம்பர் 2021-ல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, 30 நாகாவேர்ல்ட் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு…

வெள்ளை கொடியும், சிகப்பு வறுமையும்!  

இராகவன் கருப்பையா & கா. ஆறுமுகம் - நம் நாட்டில் கோறனி நச்சிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது இலட்சக் கணக்கானோர் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றித் தங்களுடைய வீடுகளின் முன் வெள்ளைக் கொடிகளை ஏந்தி உதவிக்குக் கையேந்தி நின்ற அவலம் நம் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அவர்களில்…

தாய்மொழிப்பள்ளியை எதிர்ப்பவர்கள், தங்களின் புற முதுகைப் பார்க்க வேண்டும்!

இராகவன் கருப்பையா - வெள்ளப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன-தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பு நமக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளும், 1,298 சீனப்பள்ளிகளும்  மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது சற்று நிம்மதியைக் கொடுக்கிறது. தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின்…

2021 ஒரு கண்ணோட்டம் : அமைதியற்ற நிலையில் மலேசியா

2021-ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் நாம் உள்ளோம், மலேசியாவில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூகப்-பொருளாதாரக் குழப்பங்கள் சிலவற்றைப் பற்றி ஒரு கண்ணோட்டமிடுவோம் வாருங்கள். 1. தொடரும் கோவிட்-19 தொற்றுநோய் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய கோவிட்-19 பாதிப்பில் இருந்து மலேசியாவும் விடுபடவில்லை. 2020-ஆம்…