11 தொகுதிகள் வேண்டுமா? பகல் கனவில் மக்கள் சக்தி ~இராகவன்…

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகளும் 7 சட்டமன்றத் தொகுதிளும் ஒதுக்கப்பட வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் தலைவர் தனேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கடந்த வாரம் நடைபெற்ற அதன் ஆண்டுக்…

அயல் நாட்டவரை திருமணம் செய்யும் பெண்களின் வழி குழந்தைகளுக்கும் குடியுரிமையை…

 கி.சீலதாஸ் - சமீபத்தில் உயர்நீதிமன்றம் மலேசிய குடிமகளின் கணவர் வெளிநாட்டவர் என்றபோதிலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையானது ஆணுக்குக் கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை, உரிமையை அதாவது மலேசிய குடிமகன் வெளிநாட்டு பெண்ணை மணந்து பிள்ளை பெற்றால் அந்தக் குழந்தை இயல்பாகவே மலேசிய குடியுரிமை பெறுவது போல், மலேசிய பெண்ணுக்கும் அந்த உரிமை…

இனத்துவேசம் குற்றம், என்ற சட்டம் தேவை! – இராகவன் கருப்பையா

பள்ளிகளில் நமது மாணவர்கள் எதிர்நோக்கும் இனப் பாகுபாடு ஒரு புதிய விசயமில்லை என்பது நம் எல்லாருக்குமே நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். இக்கொடுமையைக் காலங்காலமாக அனுபவித்துவரும் நம் இன மாணவர்களில் பெரும்பாலோர் கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து மௌனமாகவே காலத்தைக் கடத்திவருவதும் வெள்ளிடை மலை. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பலதரப்பட்ட காரணங்களினால்…

இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும் – கி.சீலதாஸ்

“சிறு பிள்ளை செய்த வேளாண்மை வீடு வந்து சேராது” என்பது பழமொழி. இதன் பொருள், இளைஞர்களிடம் அனுபவம் குறைந்து காணப்படும். எனவே, அவர்களின் முயற்சி பலன்தராமல் போகலாம் என்பதாகும். விஞ்ஞான வசதிகள் இல்லாத காலத்தில் இந்த விவசாயத்தை ஒட்டிய பழமொழியில் பிழை காண்பது முறையல்லதான்; ஆனால், இப்பொழுது விஞ்ஞானத்தின்…

பக்காத்தானுடன் உறவு: சப்ரியின் சாமர்த்தியம்! – இராகவன் கருப்பையா

எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானுடன் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதன் வழி தனது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி. 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' எனும் கூற்றுக்கு ஏற்பப் பக்காத்தானை அரவணைத்துத் தனது நிலையை அவர்…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 5

முன்னாள் முதன்மர் டத்தோசிறீ நஜிப் இரசாக் அவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த வியூகத்தைப் பற்றி சில வரிகளில் சொல்வதென்றால், உங்களுக்கான புதியத் தளத்தை அல்லது அடையாளத்தை எப்போதும் உருவாக்குங்கள். அதில் புதுமையும் ஈர்ப்புத் தன்மையும் இருப்பதை உறுதி செய்யுங்கள். உங்களின் பொருளையோ சேவையையோ பயன்படுத்தும் நுகர்வோர் அல்லது வாங்குவோர்…

முழு உறைவிடப் பள்ளிகளில் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கற்க…

குணசேகரன் கந்தசுவாமி - முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh) 80-களில் இருந்து மலேசியாவில் செயல்படுகின்றன. புறநகர் மாணவர்களுக்கு நிலையான மற்றும் உகந்த பள்ளிச் சூழலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முதலில் இப்பள்ளி திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் முழு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு 30…

தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிப்பதில் இஸ்ரேல் வெற்றி –…

உலக அளவில் இரட்டையர்கள் பிறப்பின் சதவிகிதம் சுமார் 1.1% ஆகும். ஒரே கருமுட்டையில் ஒரே உருவம் (Identical twins) கொண்டு பிறப்பவர்களின் சதவிகிதம் 0.3% ஆகும். அதிலும், கிரேனியோபேகஸ் (Craniopagus twins) என்று அழைக்கப்படும் தலைப் பகுதி ஒட்டிய இரட்டையர்கள் 2.5 மில்லியனில் ஒன்று மட்டுமே பிறக்கின்றது. இப்பிறப்பின்…

வல்லரசுகளையே ஆட்டிப்படைக்கும் கோவிட் பெருந்தோற்றும் – கி.சீலதாஸ்

மனிதக் குலத்தைத் தாக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், இந்த நோயைத் தரும் விஷக்கிருமி பலவிதமாக மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, வைரஸ் துகள்கள் சராசரி முப்பது விதமாக மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மை பரவும்…

விழுதுகள் இல்லாத ஆஸ்ட்ரோ, மொட்டை மரமாகக் காட்சி தரும்! –…

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி, கடந்த வாரத்தோடு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 14 ஆண்டுகளாக நாட்டு நடப்பையும் அதன் காரணக் காரியங்களையும் ஆய்ந்து, மலேசிய இந்தியர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்த விழுதுகள், இன்று இல்லை. விழுதுகளுக்கு மாற்றாக, அதினும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி விரைவில் நம்மைச் சந்திக்குமெனச் சொல்லப்படுகிறது.…

தடுப்பூசி போட்டவர்களை ‘லம்டா’ மற்றும் ‘டெல்தா’ கோவிட் உருமாற்றம் (Variant)…

கவிதா கருணாநிதி - 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் சார்ஸ் கோவ் 2 (SARS-COV-2) என்ற கிருமி முதலில் தோன்றப்பட்டு உலகம் முழுவதும் காட்டுத் தீப் போலப் பரவிக் கோரோனா வைரஸ் டிசிஸ் (கோவிட் 19) உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைகின்றது. கோவிட் உலகளவில் 217 மில்லியன்…

கோவிட் இருக்கா, இல்லையா? எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்!

கவிதா கருணாநிதி - நாம் கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று மூன்று பரிசோதனைகளின் வழி தெரிந்து கொள்ளலாம்.இந்த மூன்று கோவிட் பரிசோதனைகளும் வெவ்வேறு வகைப்படும். முதல் பரிசோதனை வகை மொலெகுலர் டெஸ்ட்(Molecular Test) எனப்படுவதாகும். பி.சி.ஆர் டெஸ்டிங் (PCR Testing) இந்த வகையைச் சார்ந்ததாகும்.  நம் மூக்கின் வழியே  அடித்தொண்டையைப்…

மலேசிய குடும்பத்தை உருவாக்க மக்கள் தயார், பிரதமர் தயாரா? –…

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாம் பிரதமராகப் பதவியேற்றதும் மலேசியர்களை நோக்கி முதல் வேண்டுகோள் விடுத்தார். அது வேண்டுகோளா அல்லது அவரின் தனிப்பட்ட அபிப்பராயமா, இரண்டில் எது என்பதைக் கிரகிக்க முடியவில்லை. ஏனெனில், அரசியல்வாதிகள் பொதுவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் சிந்திப்பார்கள்.  சிந்தித்துப் பேசும் பழக்கம்…

புதிய இருதய சிகிச்சை –  ஐஜேன்-னின் புத்தாக்க கண்டு பிடிப்பு…

தேசிய இருதய சிகிச்சை மையம் (IJN) ட்ரைஸ்குபிட் ரிகர்ஜிடேஷன் (tricuspid regurgitation) அல்லது கசிவு இதய வால்வுகளால் (leaky heart valves) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சிகிச்சை முறையை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இச்சிகிச்சை ட்ரிக்வால்வு ® டிரான்ஸ்காதீட்டர் பைகாவல் வால்வுகள் சிஸ்டம் (பயோப்ரோஸ்டெசிஸ்) (Tricvalve® Transcatheter Bicaval Valves…

இனவாத அரசியலில் இலவு காத்த கிளிகளாக இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா - திங்கள்கிழமை (30/8/21) பதவியேற்ற நாட்டின் புதிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகச் சரவணனும் சுற்றுலாத்துறை துணையமைச்சர் சந்திரக் குமாருமாக 2 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் அதிர்ச்சியோ ஆத்திரமோ ஆச்சரியமோ படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் பிரதமர் மஹியாடின் அறிவித்த அமைச்சரவையிலும்…

அவதிப்படும் ஆசிரியர்களும் – பள்ளிப்பிள்ளைகளின் எதிர்காலமும்

இராகவன் கருப்பையா -  கோறனி நச்சிலினால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டிருந்த போதிலும் உலகின் பல நாடுகளில் பள்ளிக் கூடங்கள் கிட்டதட்ட வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டன.ஆனால் நமது பிள்ளைகள் இன்னமும் இலக்கற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருப்பது பரிதாபகரமான நிலைதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர் - மாணவர் உறவுகளில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 4

இந்த நீல பெருங்கடல் வியூகத்தை வணிக நிறுவனம் மட்டுமன்றி இலாப நோக்கு இல்லாத அரசு அல்லது தனியார் நிறுவங்களும் பயன்படுத்தலாம். இந்த உத்தி ஒரு மாற்றுச்சிந்தனை. வழக்கமாக நாம் பயன்படுத்தும் வியூகத் திட்டத்திற்கு (Long Term Strategic Plan) மாற்றாக, விரைந்து குறுகிய காலத்திலேயேப் பலன்களைப் பெறுவதற்கு இந்த…

தீதும் நன்றும் பிறர் தர வாரா – கபட அரசியலில்…

கடந்த ஆகஸ்ட் 16-இல் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பிரதமர் பதவியைத் துறந்தார். மாமன்னரும் அதை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை நியமிக்கும் வரை முகைதீனையே பராமரிப்புப் பிரதமராக நியமித்துள்ளார். பதவி துறந்த பின், முகைதீன் யாசின் நாட்டுக்கு ஆற்றிய தமது உரையில், சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த…

புதிய அமைச்சரவைக்கு திறமைசாலிகள் வேண்டும்!

இராகவன் கருப்பையா -நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இஸ்மாய்ல் சப்ரிக்கு அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது. இவ்வாரத்தில் தனது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளை வழங்கவிருக்கிறார் என்பதை அறிவதற்குப் பொது மக்கள் கழுகுப் பார்வையைக்…

மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன்…

மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ  மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப்…

ஓரின அரசியல் ஆதிக்கமும், ஊழல் உருவாக்கமும்!  

இராகவன் கருப்பையா - பிரதமர் மஹியாடின் தனது பதவியைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராய் உள்ளார் என்பதையே புலப்படுத்துகிறது வெள்ளிக்கிழமை (6.8.2021) மாலை அவர் செய்த அறிவிப்பு. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவளித்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தொலைக்காட்சியில்…

அடுத்த பிரதமருக்கு 10 பேர் தயாராகி வருகிறார்கள்!

இராகவன் கருப்பையா - 'புத்திசாலிகள் மற்றவர்கள் செய்யும் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். முட்டாள்கள்தான் சொந்தத் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்,' என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கோறனி நச்சிலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நம் நாடு இன்னமும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 3

நீங்கள் முன்னோடியா பின்னோடியா? ~ முனைவர் இரா. குமரன் வேலு முதலில் முன்னோடி என்பதற்கும் பின்னோடி என்பதற்கும் விளக்கம் காண்போம். ஒரு புதிய நடைமுறை, புதிய வழிமுறை, புதிய உத்தி, புத்தாக்க கண்டுபிடிப்பு, புதிய கருவி என பலவகை ஏடல்களை முதன் முதலில் நீங்கள்தான் அறிமுகப்படுத்தினீர் என்றால் நீங்கள்…