வாங்க, சமத்துவத்திற்காக ஓடலாம்! – கோமாஸ் இயக்கம்

மலேசியாவில் சமத்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாகும். இருப்பினும், மலேசியர்கள் அனைவரும் ஒரு சுமுகமான வாழ்க்கையை அரவணைத்து வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம். விடுதலை மலேசியாவில் வாழ்கின்ற இரண்டாம்  தலைமுறையினர், ஒரு இனபேதமற்ற சமத்துவமான மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையின் உந்துதல், கோமாஸ் மையத்தின் (PUSAT KOMAS) ஒரு திட்டமாக உருவானது. அது…

நியமனத்தில் உள்ள அரசியல் கலப்பும்,   அக்ரில் சானியிடம் எதிர்பார்பதும்!

இராகவன் கருப்பையா - நாட்டின் 13ஆவது காவல்படைத் தலைவராக கடந்த 4ஆம் தேதியன்று பொறுப்பேற்ற அக்ரில் சானி மீது மக்களின் கழுகுப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் புதிதாக பொறுப்பேற்ற காவல்படைத் தலைவர்களை விட இவருக்கு தீர்வு காணப்படாத வேலைகள் நிறையவே காத்திருக்கின்றன. கடந்த…

நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!

கி.சீலதாஸ் - இந்த நாட்டில் வாழ்ந்ததாக, வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியர்கள், அவர்களின் நன்மைக்காக, உரிமைக்காக உழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்நாளையும் எவ்வித சலனமும் இன்றி, கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல், நினைக்காமல் வாழ்ந்தவர்கள் யார்? இந்தியச் சமுதாயம் மனிதருள் மனிதராக வாழ வேண்டுமென ஏங்கினவர்கள் யார்? அவர்களின் நல்ல சிந்தைகள் கைகூடாது…

அரசனை நம்பி புருஷனை கைவிடுமா ம.இ.கா.? திக்கற்ற அரசியலில் இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் அம்னோவின் தோழமை கட்சியாக பின்னி பிணைந்து உறவாடிய ம.இ.கா. தற்போது தீர்க்கமான ஒரு முடிவு செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் அரசாங்கத்தை கவிழ்த்து கொல்லைப்புற ஆட்சியமைத்த…

தடுப்புக் காவல் மரணம்: கொலையல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்,

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தடுப்புக்காவல் கைதிகள் அடையும் மர்மமான மரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆகக் கடைசியாக கடந்த வாரத்தில் 40 வயதுடைய கணபதியின் இறப்பு இந்த சோகக்தொடருக்கு மேலும் உரமூட்டியுள்ளது. ஏழு வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுக்குத்…

இந்நாட்டில் திராவிட தேசியம் தேவையா? – கி.சீலதாஸ்

இந்த 2021 ஆம் ஆண்டு ஓர் அற்புதமான சங்கமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை மார்ச் அல்லது ஆப்ரில் மாத காலத்திலும், வைசாக்கி தினம் ஆப்ரில் பதிமூன்றாம் தேதியிலும், மலையாளப் புத்தாண்டு விஷு ஆப்ரில் பதினான்காம் தேதியிலும் கொண்டாடப்படுவது வழக்கம். நேப்பாளத்திலும் பதினான்கு ஆப்ரில்…

பல்லினங்களின் தனித்துவ பண்பாடுகள் – நமக்கு பலமா? பலவீனமா?

கி.சீலதாஸ் - பல இனங்கள் வாழும் நாட்டில் மொழி, சமய, கலாச்சார வேறுபாடுகள் மலிந்து பிரச்சனைகளாக உருவெடுப்பது விந்தையும் அல்ல, ஆச்சரியப்படத் தக்கதுமல்ல. பல இனங்களின் மாறுபட்ட கலாச்சாரங்களில் ஒரு வகை ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியுமா? அல்லது பெரும்பான்மையினரின் கலாச்சாரமே நாட்டின் மூலக் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? ஒரு…

கோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது?  

இராகவன் கருப்பையா- இவ்வாண்டு இறுதி வாக்கில் மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற கணிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடக்கத்தில் நிலவிய போதிலும் இன்னும் 2 மாதங்களில், பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை விட அதன்…

வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் – ந காந்திபன்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) கணக்கிற்கு ஏற்ப, குடும்பக் கடன்கள் சுமார் 93.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மலேசியத் தேசிய வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்டதாரிகளின் சம்பளம் RM2,000 / RM2,500- லிருந்து, இப்பொழுது ஏறத்தாழ RM1,500-ஆக இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மௌனம் காத்து வருவது…

தமிழ்ப் புத்தாண்டை அரசியலாக்குவதா? -கி.சீலதாஸ்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் (காலண்டர்கள்). அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முப்பது விதமான ஆண்டுக் குறிப்பேடுகள் இருந்தன; அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. இதைப்பற்றி குறிப்பிட்ட அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்த வேறுபாடுகள்…

ருசிகண்ட புலி பூனையான கதை!

இராகவன் கருப்பையா - மலேசியாவை அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் முன்னின்று நிர்வகித்தது மட்டுமின்றி காலங்காலமாக அரசியல் 'புலி'யாகத் திகழ்ந்த அம்னோ தற்போது மக்களின் கேலிக்கூத்துக்கு இலக்காகியுள்ள ஒரு 'பூனை'யாகிவிட்டது என்றால் அது உண்மையா அல்லது நடிப்பா! அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதன் தலைவர்களின் சுயநலப் போக்கினால் கடந்த சில மாதங்களாக அக்கட்சி…

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மஇகா!

இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் அரசியல் வரலாற்றில் காலங்காலமாக இந்தியர்கள் என்றால் ம.இ.கா.தான் என்ற நிலைமாறி நீண்டநாள்களாகிவிட்டன. கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி அக்கட்சிக்கு ஏறக்குறைய சாவுமணியடித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கடுத்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியைத்…

நஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தற்போதைய கொள்ளைப்புற அரசாங்கத்தின் தவணைகாலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில்தான் நிறைவுபெறும்.  அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், எரியும் வீட்டில் குளிர் காய்வது போல் நடந்து கொள்வது, அடுத்த பொதுத் தேர்தல் எப்போதும் நடைபெறலாம் என்றே தொன்றுகிறது. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில்…

அம்னோ மாறுமா? கி.சீலதாஸ்

பதினான்காம் பொதுத் தேர்தலில் அம்னோ தமது அரசியல் அதிகாரத்தை இழந்தது. அம்னோவை வீழ்த்தியவர்கள் அதன் முன்னாள் தலைவர்கள். குறிப்பாக டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம், துன் டாக்டர் மகாதீர் முகம்மது, டான் ஶ்ரீ மையுதீன் யாசின் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அம்னோ அரசியல் கலாச்சாரத்தைக் கைக்கழுவிட்டு புது அரசியல்…

தேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கோறனி நச்சில் ஏற்படுத்திய பயத்திலேயே கடத்திய நாம், தடுப்பூசியின் வருகையால் தற்போது நிம்மதி பெருமூச்சில் திளைத்திருப்பது யாரும் மறுப்பதற்கில்லை. நோயின் தாக்கம் உலகளாவிய நிலையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, 'இது எங்கே போய் முடியுமோ' என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் திக்கற்று இருந்த நம்…

இந்துத்துவ இந்திய அரசியல், இங்கே வேண்டாம்! – கி.சீலதாஸ்

இந்த நாட்டின் தூண்கள் எனப்படும் ருக்குன் நெகாரா நாட்டின் தனித்தன்மை கொண்ட இலட்சியங்களை உள்ளடக்கியதாகும். ருக்குன் நெகாரா தேசிய தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. அது எதை உறுதிப்படுத்துகிறது? இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல், சட்டம் முறைப்படி ஆட்சி…

சட்டத்தை மீறுவதும் சாதனைதானோ?

இராகவன் கருப்பையா -கோறனி நச்சிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நமது அரசாங்கம் விதித்திருக்கும் 'எஸ்.ஓ.பி.' எனப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மீறும் 'வி.ஐ.பி.'களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவது எல்லாருக்கும் பெரும் வியப்பாகவே உள்ளது. அத்தகைய குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் மக்களுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லவேண்டும்.…

`தொழிற்சங்கவாதி` என்பதில் பெருமைகொண்டு வாழ்ந்த தோழர் ஜீவி காத்தையா

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா அவர்கள் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. [caption id="attachment_190056" align="aligncenter" width="960"] 26/01/2019 - ஜொகூர், கூலாயில் எங்களின் இறுதி சந்திப்பு[/caption] செம்பருத்தி.காம் மற்றும்…

எப்போது வரும் பள்ளிக்கூட நிதி? ம.இ.கா. பதிலுரைக்க வேண்டும் ~இராகவன்…

நீண்ட நாள்களுக்குப் பிறகு நாடளாவிய நிலையில் பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பிள்ளைகள் மிகவும் உற்சாகமாக வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளதை பரவலாகக் காண முடிகிறது. ஆனால் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில் நம் பிள்ளைகளிடையே அந்த உற்சாகம் எவ்வளவு நாள்களுக்கு…

நீதிமன்றத் தீர்ப்புகள், காற்றில் கரைந்தோடுமா?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் அடைக்கலம் கோரியிருந்த மியன்மார் நாட்டு அகதிகளில் 1086 பேரை கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நமது குடி நுழைவுத் துறையின் போக்கு உண்மையில் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கையாகும். மியன்மார் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடப்பில் உள்ளதால் இந்த அகதிகளின் உயிர்களுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை…

பெண் சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல –…

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை | வடிவமைப்பாளர் ஒருவர், ஆண் பிரபலம் ஒருவருக்கு பெண் வேடம் வரைந்து தன் ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். நான் அவருடைய முகநூல் உள்பெட்டிக்குச் சென்று, பெண்கள் மீது உங்களுக்கு ஏன் அத்தனை வெறுப்பு என்றேன். இல்லையே, நான் பெண்களை மதிக்கிறவன் என்றார்.…

மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அரணாக இருந்தவர்கள் சிறுபான்மையினர்

 கி.சீலதாஸ் -   இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பலவகையில் கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று சிறுபான்மையினர் என்ற கேலிக்குக் குறிவைக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் சபா, சரவாக் பூர்வீகக் குடியினர் கூட சிறுபான்மையினர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீபகற்ப மலாயாவை எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் பிழைப்பை…

உபகாரச் சம்பளத்துடன் ஆசிரியர் பயிற்சி – குமரன் வேலு

கடந்த ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கற்பிக்க ஆசிரியர் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதாகக் கல்வியமைச்சுக் கூறி வருகிறது. நாம் அறிந்தவரை நாடு தழுவிய அளவில் 800-900 பயிற்சிப்பெற்ற இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியரின் தேவையும் மேலதிக எண்ணிக்கையை எட்டிவிட்டதாகத்…