தமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை சந்திப்பும் மலேசியாவில் தமிழர் களம் அமைப்பும்.

arimaதமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை சந்திப்பும் மலேசியாவில் தமிழர் களம் அமைப்பும்.

தமிழ் நாடு தமிழர்களே ஆழ வேண்டும். தமிழ்  நாடு தமிழர் நாடாக மாற வேண்டும் என்றும் , தமிழர் அரசியல் தமிழர் சமூக தமிழர் பொருளாதார கல்வி உலகத  தமிழர் இன பாதுக்காப்பு போன்ற கொள்கை போராட்டங்கள் நடத்தி வரும் பெங்களூர் தமிழ் அறிஞர் குணா அவர்களின் அமைப்பின் பொதுச் செயலாளர்  தமிழன் அரிமாவளவன் குறுகிய கால வருகை மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக பல ஊர்களில் தமிழர் களம், தமிழ் இன தனி அணி சிந்தனைகளை மலேசியா தமிழர்களிடம் பேசி மலேசியாவில் தமிழர் களம் அமைப்பு அமைப்பது பற்றி கலந்தாலோசித்ததின் பேரில் மலேசியா தமிழ் சார்பு இயக்க தலைவர்களையும் தமிழ் தொண்டர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு கூட்டம் எதிர் வரும் 16/12/2013 காலை 10 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் எண் 147 பிரதான சாலை  புத்ரி உணவக மேல் மாடியில் நடை பெறும் என்று இதன் ஏற்ப்பாட்டளர்களில் ஒருவரான பொன் ரங்கன் தெரிவித்துக்கொள்கிறார்.

நாம் தமிழர் ,தமிழர் தேசியம், தமிழர் களம் என்ற மூன்று தமிழக அம்மைப்பின் முழு அணியில் தமிழர்களின் அடுத்தக்கட்ட தமிழர் நாட்டின் தமிழர் ஆட்சி நகர்வுக்கும்  கடல் கடந்து வாழ் தமிழர்களின் உறவும் ஆதரவும் தமிழர் நாட்டின் அடிப்படை உரிமையும் உலகத்தமிழர்களின் அரசியல் ஆதிக்க ஆளுமையை நிலை நிற்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழர் நாட்டு தமிழர்களின் அரசியல் நிலைத  தன்மைக்கு பிறகே இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்.உலகெங்கும் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் அவரவர் வாழும் நாட்டில் தமிழராய் நின்று நிமிர்த்தல் மட்டுமே தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் மண் உரிமைக்கு சொந்தமாகும் என்ற சிந்தனை உறவில் வலுவாக உள்ளவர்களை அழைக்கிறோம்.

இந்த அமைப்பும் அறிவிப்பும் மலேசிய தமிழர்களை பொறுத்த மட்டில் காலத்தின்  கட்டாயம், அவசியம் என கலந்து சிற்பிக்க வேண்டுகிறோம்.

உலகத தமிழர் பாதுக்காப்பு இயக்கம் மலேசியா.