அம்பாங் ,பாண்டான் இரண்டு பிகேஆர் கிளைகளிலும் தலைவர் பொறுப்புக்கு இந்தியர்கள் போட்டி !

pkr logoசிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய பிகெஆர் தொகுதி
கிளைகளில் குறிப்பாக பிகெஆர் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்தை வைத்துள்ள அம்பாங், பாண்டன் என்ற இரண்டு தொகுதியில் இப்போட்டி நிலவுகிறது.

பாண்டானில் முன்பு லேம்பா பந்தாயில் இருந்த இளஞர் திரு .ராமன் இளங்கோவும், அம்பாங்கில் சமூக சேவகர் உலக தமிழர் பாதுகாப்பு இயக்க இயக்குனர் திரு பொன் ரங்கனும் களம் இறங்குகின்றனர்.

பிகெஆர் ஒரு பல்லின உரிமைக கட்சி அடிப்படையில் நாடு முழுக்க தொகுதி கிளைகளில் இந்தியர்கள் இந்த முறை போட்டி இட தயாராகி உள்ள வேளையில் இது கட்சிக்கும் இனத்துக்கும்  ஒரு ஆரோக்கியமான பலத்தை குறிப்பா இந்தியர்கள் மத்தியில் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த தேர்தலில் நம்மவர்கள் வாக்கால் வெற்றிபெற்றவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கட்சியில் நம்மமை உயர்த்தவில்லை,அரசு அரசு சாரா பதவிகளிலும் நமக்கு ஏமாற்றமே! குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பாங் MPAJ எனும் நகராண்மை கழக இரண்டு இந்தியர்கள் பதவி நிரப்ப படாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.

இதுபோல அம்பாங் தமிழ்பப பள்ளி  நிலம் கெடுபிடி  /பள்ளி திடல் மீது தோல் சாலை தசெக் பெர்மாய் மக்களின் வாழ்வாதார சிக்கல் போன்றவை தலை  தூக்கி உள்ளது.

பழையது பழையதாக இருக்க மிக மோசமாக போக நாம் இனி இடம் தரலாகாது. அரசியலில் ஏமாறுவதும் எமாற்றபடுவதும் நம் தலை விதி என்று போக முடியாது. நம் உரிமை வெல்ல இந்தியர்கள் தமிழகர்கள் சிந்தனைக்கு ஒரு திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 11/4/2014 வெள்ளிகிழமை இரவு 7 மணிக்கு அம்பாங் கம்போங் தசெக் பெர்மாய் மண்டபத்தில் திரு பொன் ரங்கன் அவர்கள் தலைமையில் நடைபெறும். அதுபோது கட்சியில் பொறுப்பு வகிக்க விரும்பும் உறுபினர்கள் /இளையர்கள் மாதர்கள் தங்கள் அடையாள அட்டை நகல் ஒரு பாஸ்போட் அளவு படம் உடன் கொண்டுவர வேண்டுகிறோம் . மேலும் விபரம் பெற திரு பொன் ரங்கன்
016 6944223016 6944223 அல்லது திரு ராமன் 0162777576 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.மீண்டும் சந்திக்கும் வரை நன்றி .