சரித்திரம் செய் ………………. (மு.கோபி சரபோஜி)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

vicஇளைஞனே……..! 

இன்னும் என்ன
உறக்கம்?
எதற்காக இந்த
தயக்கம்?

உன்னை அறி.
அறிதலில் தொடங்கி
உற்சாகத்தின் 
உன்னதத்தில் முடி.

எதிர்மறை சிந்தித்தலில்
நேர்மறை சிந்தனைகளை
தொலைத்து விடாதுஉன்
சிறகுகளை அகல விறி.

எதையாவது
செய்வதை விடுத்து
எதைச் செய்வது
என திட்டமிடு.

சந்தர்ப்பங்களுக்காக
காத்திருப்பதை விடுத்து
சகலத்தையும்
சந்தர்ப்பங்களாக்கு.

தோல்விகளைக் கண்டு
துவளாமல்அதன்
வலிகளை
தோள் வரை வை.

விழுந்ததற்காக
அழாதே.
எழுவதற்காக
விழப்பழகு.

வெற்றியின் தாகத்தோடு இரு.
தாகத்தோடு வேகமாய்
வேகத்தோடு
விவேகமாய் செயல்படு.

ஆரியக்கூத்தாடும்
கலைக் கூத்தாடியாய்
காரியம் செய்யும்
ரெளத்ரம் பழகு.

பொழுது போக்கு கழுகுகளுக்கு
நேர மாமிசங்களை போடாமல்
காலத்தே நின்று
காரியம் செய்.

சாதித்தவர்களின்
சரித்திரம் படித்து
உனக்கென
தனியே செய்
ஒரு சரித்திரம்

– மு.கோபி சரபோஜி

TAGS: