கேஎல்ஐஏ2-க்குச் செல்ல ஏர்ஏசியா ஒப்புக்கொண்டது

airasiaஒருவழியாக  கேஎல்ஐஏ2-இலிருந்து  செயல்பட  ஏர்ஏசியா  நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.  அனைத்துலக  சிவில்  விமானப்  போக்குவரத்து  நிறுவன(ஐசிஏஓ)த்தின்  நிபுணர்களைக்  கொண்டு  புதிய  விமான  நிலையத்தின்  நீண்டகாலப் பாதுகாப்பு  அம்சங்களை  அளவிட புத்ரா  ஜெயா  முடிவு  செய்திருப்பதுதான்  இதற்குக்  காரணமாகும்.

“இம்முடிவு  அரசாங்கம்  பாதுகாப்பு  அம்சத்துக்கும்  கேஎல்ஐஏ2 பாதுகாப்பானது  என்பதை  மக்களுக்கு  உறுதிப்படுத்தவும்  கொடுக்கும்  முன்னுரிமையைப்  பிரதிபலிக்கிறது. இந்த  விவகாரத்துக்கு  முன்னுரிமை  கொடுக்கும்  அரசாங்கத்துக்கு  எங்கள்  நன்றி”, என  இன்று  வெளியிடப்பட்ட  அந்நிறுவனத்தின்  அறிக்கை  ஒன்று  கூறியது.