தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய ராஜிவ் காந்தி! சோனியா

soniaகாங்கிரசை தவிர வேறு எந்த கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது என சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டுக்கு மிகவும் அவசியமான பல திட்டங்களை மத்தியில் ஆளும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்த 40 கோடி மக்களை, 10 ஆண்டுகளில் மீட்டுள்ளோம்.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், ஏராளமான ஏழை மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71 ஆயிரம் கோடி வரை கடனுதவி வழங்கியுள்ளோம்.

மேலும், மத்தியில் ஆளும் காங்கிரசைத் தவிர வேறு எந்த கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்துள்ளது?

தலைவர் ராஜிவ் காந்தி இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை யாராலும் மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்.

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும். இங்கு வாழும் தமிழர்களுக்கு சாலைகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

TAGS: