அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் உறுதி செய்ய பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

ed_milibanஇலங்கையில் அனைத்தின மக்களது அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் முறையாக உறுதி செய்யப்படுவதற்கு, பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீமான சர்வதேச விசாரணையை நடத்த தொழிற்கட்சி ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிiவேற்றப்பட்ட பிரேரணையை தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சிறிலங்காவின் அடிப்படை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான படிகளாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: