சுல். நூர்டின்: ஹுடுட்டுக்காக அல்லாஹ் கர்பாலைச் சாகடித்தார்

zulபுக்கிட்  குளுகோர்  எம்பி  கர்பால்  சிங்கின் இறப்புக்காக  இரங்கல்  செய்திகள்  குவியும்  வேளையில்,  இதயமற்ற   சிலர்  அவரின்   இறப்பைக்  கொண்டாடுகிறார்கள்.

அந்த  வகையில்  கூலிம்  பண்டார்  பாரு  எம்பி  சுல்கிப்ளி  நூர்டின்  தெரிவித்துள்ள  கருத்து  பலரின்  ஆத்திரத்தைக்  கிளறி  விட்டிருக்கிறது. அவர்,  கர்பாலின்  இறப்பு   மலேசியாவில்  ஹுடுட்  சட்டம்  நிலைபெற  உதவும்  என்பதால் இறைவனுக்கு நன்றி  தெரிவித்துக்கொண்டார்.

“கிளந்தான்  பாஸ்  அரசு  அம்னோவின்  உதவியுடன்  ஹுடுட்  சட்டத்தைச்  செயல்படுத்த  விரும்பும்  வேளையில்  அல்லாஹ்  கர்பாலைச்  சாகடித்துள்ளான்.  அதற்கு (ஹுடுட்டுக்கு)  கடும்  எதிர்ப்பாளரே  அவர்தான்”,  என்றவர்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

இந்தப்  பதிவினால்  ஆத்திரமடைந்த  இணையப்  பயனர்கள், சுல்கிப்ளிக்குக்  கடும்  கண்டனம்  தெரிவித்துக்  கொண்டனர்.

இளைஞர்,  விளையாட்டுத் துறை  அமைச்சரும்  அம்னோ  இளைஞர்  தலைவருமான  கைரி  ஜமாலுடின், “வாயை  மூடும்”, என்று  கடிந்து  கொண்டார்.

மஇகா  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  எஸ்.வேள்பாரி,  சுல்கிப்ளியை  அரசியல்  சைத்தான்  என்று  வசை பாடினார்.

தரம்கெட்ட  மனிதர்  என  மரினா  மகாதிர்  சினந்து  கொண்டார்.