பினாங்கில் கர்பாலுக்கு அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்கு

karpalபினாங்கு  அரசு,  காலஞ்சென்ற  நாடாளுமன்ற  உறுப்பினர்  கர்பால்  சிங்குக்கு  அதிகாரப்பூர்வமான  முறையில்  இறுதிச்  சடங்குகளைச்  செய்யும்.

கர்பாலின்  நல்லுடல்  பினாங்கு  கொடியால்  போர்த்தப்படும்  என  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

மாநில  அரசுக் கட்டிடங்களில்  பினாங்கு  கொடிகள்,  ஞாயிற்றுக்கிழமைவரை  அரைக் கம்பத்தில்  பறக்கவிடப்படும்.

கர்பாலின்  உடல்  பொதுமக்கள்  இறுதி  மரியாதை  தெரிவிப்பதற்காக  டேவான் ஸ்ரீ பினாங்கில்  ஞாயிற்றுக்கிழமை  காலை  மணி  9-இலிருந்து  11 வரை  கிடத்தி  வைக்கப்பட்டிருக்கும்.

பினாங்கு  மாநில  ஆட்சிக்குழு  இன்று  அவசரக்   கூட்டம்  நடத்தி  இம்முடிவைச்  செய்ததாக  லிம்  கூறினார்.