கர்பால் விபத்து : லாரி ஓட்டுநர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்

acciஇன்று  அதிகாலை  புக்கிட்  குளுகோர்  எம்பி  கர்பால்  சிங்  கொல்லப்பட்ட  சாலை  விபத்தில்  சம்பந்தப்பட்ட  லாரியின்  ஓட்டுநர்  போதைப்  பொருள்  உட்கொண்டிருந்தார்  என்பது  தெரிய  வந்துள்ளது.

தொடக்க  நிலை  ஆய்வுகள்  அவரது  உடலில்  கேன்னபிஸ்  இருப்பதைக்  காட்டின  என்று  பேராக்  போலீஸ்  தலைவர்  ஏக்ரைல்  சானி  அப்துல்லா  கூறினார்.

அதை  உறுதிப்படுத்துவதற்கு  இரண்டாவது  ஆய்வு  ஒன்றும்  செய்யப்படும் என்று  கூறிய  லாரி  ஓட்டுநரிடம்  வாக்குமூலம்  பதிவு செய்யப்பட்டு  அவர்  விடுவிக்கப்பட்டிருப்பதாகவும்  சொன்னார்.

கர்பால்  பயணம்  செய்த  ஒரு  MPV  வாகனமான  Toyota Alphard  அதன் கட்டுப்பாட்டை  இழந்து,   இடப்பக்கம்  மெதுவாக  சென்று  கொண்டிருந்த  லாரியின்  வலப்பக்கத்தில்  மோதியதாகக்  கூறப்படுகிறது.