இண்ட்ராப்: எம்ஓயு-வை மதிக்கவில்லை என்பதை பிஎன் அறிவிக்க வேண்டும்

hindrafபிஎன்  கூட்டணி,  இண்ட்ராப்- பிஎன்  புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை(எம்ஓயு) மதிக்கப்போவதில்லை என்பதை  ஒப்புக்கொண்டு  அதை  வெளிப்படையாக  அறிவிக்கவும்  வேண்டும்  என  இண்ட்ராப்  செயலாளர்  பி.ராமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

அந்த  எம்ஓயு  கைப்பொப்பமிடப்பட்டு ஒராண்டு  நிறைவுபெறும்  வேளையில். பிஎன்  தலைமைச்  செயலாளருக்கு  எழுதிய  திறந்த  மடலில்  ராமேஷ், அரசாங்கம்  இவ்விவகாரத்தில்   தன்  நிலையை தெளிவாக  உணர்த்திட வேண்டும்  எனக்   கேட்டுக்கொண்டார்.

“ஒப்பந்தத்தை  மதிக்கும்  நோக்கம்  உங்களுக்கு  இல்லை  என்ற  எங்கள்  நிலைப்பாட்டை, (இண்ட்ராப்  தலைவர்) பி. வேதமூர்த்தி  ஒப்பந்தப்படி அவருக்கு  வழங்கப்பட்ட  பொறுப்புகளைத்  துறந்ததன்  மூலம்  உணர்த்தி விட்டோம்.

“இனி, உங்கள்  முறை. . பிஎன்னின்  நிலை  என்னவென்பதை  வெளிப்படையாக  அறிவிக்க  வேண்டும்”.

இவ்விவகாரத்தில்  அரசாங்கத்தின்  நிலையை  அறிந்துகொள்ள  மலேசியர்கள்,  குறிப்பாக  மலேசிய  இந்தியர்கள்  ஆவலாகக்  காத்திருக்கிறார்கள்  என்றாரவர்.