பினாங்கு பவன வீதிக்கு கர்பால் பெயர் சூட்டப்படும்

 

Karpal- Promenadeகடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும்.

மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார்.

ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங் மக்கள் உலாவும் அப்பகுதி “கர்பால் சிங் டிரைவ்” அல்லது “பெர்சியாரான் கர்பால் சிங்” என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து எதிர்வரும் மாநில ஆட்சிக்குழு முடிவு செய்யப்படும் என்று குவான் எங் மேலும் கூறினார்.

கர்பாலின் மரணத்திற்குப் பின்னர் முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய கர்பாலின் துணைவியார் குர்மிட் கவுர், கர்பாலுக்கு அளிக்கப்படுள்ள கௌரவத்திற்கு மாநில அரசுக்கு நன்றி கூறினார்.

மாநிலத்தின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கு விட்டு கர்பாலுக்கு மரியாதை தெரிவித்ததற்கும் அரச மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி அளித்ததற்கும் அவர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

 

 

TAGS: