தண்ணீர் தட்டுப்பட்டால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை இழுக்கப் பார்க்கிறது நெகிரி

nsசிலாங்கூரில்  நீர்ப்  பங்கீட்டால்  பாதிக்கப்பட்டுள்ள  தொழிற்சாலைகள்   நெகிரி  செம்பிலானுக்கு  வரலாம்  என்று  அழைப்பு  விடுத்திருக்கிறார்  நெகிரி  செம்பிலான்  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசன்.

நீர்ப் பங்கீட்டால்  நாளொன்றுக்கு  ரிம15 மில்லியன்  இழப்பு  ஏற்படுவதாக  நெஸ்லே  மலேசியா  நிறுவனம்  பெரித்தா  ஹரியானில் கூறியிருப்பதற்கு  எதிர்வினையாக  அவர்  இந்த  அழைப்பை  விடுத்தார்.

“அது (நெஸ்லே), ஒரு  பொருத்தமான  இடத்தைப்  பார்க்க  எப்போது  வேண்டுமானாலும்  வரலாம்”,  என்றாரவர்.

தொழிற்சாலைகளுக்கு  நிலையான  நீர்  விநியோகம்  உண்டு  என்பதற்கு  முகம்மட்  உத்தரவாதம்  அளித்தார்.