குளுகோர் தொகுதி பற்றி இசி விவாதிக்கும்

gelugorபினாங்கில்  குளுகோர்  நாடாளுமன்றத்  தொகுதி  பற்றி  விவாதிக்க  தேர்தல்  ஆணையம்(இசி)  வியாழக்கிழமை  சிறப்புக்  கூட்டம்  நடத்தும்.

கர்பால்  சிங்  காலமானதை  அடுத்து  அத்தொகுதி  காலியானதைத்  தெரிவிக்கும்  மக்களவைத்  தலைவரின்  கடிதம்  காலை  11 மணிக்குக்  கிடைத்ததாக   இசி  செயலாளர்  அப்துல்  கனி  சாலே  கூறினார்.

கூட்டம் புத்ரா  ஜெயாவில்  நடைபெறும்  எனவும்  அதன்பின்னர்
இசி  தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  செய்தியாளர்  கூட்டமொன்றைக்  கூட்டுவார்  என்றும்  அவர்  தெரிவித்தார்.

2013  பொதுத்  தேர்தலில் அத்தொகுதியில்,  பாரிசான்  நேசனலின்  தே பெங்  இயமை 41,778 வாக்குகள்  பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி  பெற்றார்  கர்பால்.