செயற்கை மழை பெய்விக்க தாய்லாந்து விமானங்கள் அமர்த்தப்படலாம்

அரசாங்கம்  மேக விதைப்பு முறையைத்  தொடர்ச்சியாக  மேற்கொண்டு  செயற்கை  மழை  பெய்விப்பதற்கு  தாய்லாந்து  விமானங்களை  வாடகைக்கு  அமர்த்திக்கொள்ளக்  கூடும்.

இதனைத்  தெரிவித்த  எரிபொருள், பசுமைத்  தொழில்நுட்பம், தண்ணீர்  வள  துணை  அமைச்சர்  மஹாட்சிர்  காலிட்,  இப்போது அப்பணிக்கு  அரச  மலேசிய  ஆகாயப்  படை  விமானங்கள்  பயன்படுத்தப்படுவதாகவும்  ஆனால்  மேக  விதைப்பைத்  தொடர்சியாக  மேற்கொள்ள  அவற்றின்  எண்ணிக்கை  போதுமானதல்ல  என்றும்  சொன்னார்.