சிறையில் இறப்பு: மரண விசாரணை தேவை

kamarulதொழிற்சாலை  ஊழியரான  கமருல்நிஸாம்  இஸ்மாயில், கடந்த  மாதம்  தாப்பா  சிறையில்  வைக்கப்பட்டிருந்தபோது  இறந்துபோனதன்  காரணத்தைக்  கண்டறிய  நீதிவிசாரணை  தேவை  என  அவரின்  குடும்பத்தார்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இதன்  தொடர்பில்,  அவரின்  குடும்பத்தார்   என்ஜிஓ-கள், அரசியல்  கட்சிகள்   ஆகியவற்றின்  உதவியுடன்  ஐந்து-அம்ச  மகஜர்  ஒன்றை  மாநில  போலீஸ்  தலைவர்  அப்துல்  ரஹிம்  ஹனாபியிடம்  கொடுத்திருப்பதாக  சுவாரம் (பினாங்கு   கிளை)  பேச்சாளர்  ஒங் ஜிங்  செங்  கூறினார்.

மற்றவற்றுடன்  அம்மகஜர்,  மரண  விசாரணை  வெளிப்படையாக  நடத்தப்பட  வேண்டும்  என்றும்  கமருல்நிஸாமின்  இறப்புக்கான  உண்மையான  காரணத்தைப்  போலீஸ்  தெரிவிக்க  வேண்டும்  என்றும்  கேட்டுக்கொண்டிருக்கிறது.