காலிட்: நீர் நெருக்கடிக்குத் தீர்வு காணப்படும், நம்புங்கள்

watசிலாங்கூரில்   நீர்ப்  பங்கீடு  தொடர்வதால்  வெறுப்பு  வளர்ந்துவரும்  வேளையில். நீர்  நெருக்கடிக்குத்  தீர்வுகாணப்படும்  என்று  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  ஆறுதல்  கூறுகிறார்.

“ஐந்திலிருந்து  ஆறு  மாதங்கள்வரை  நீடிக்கக்கூடிய எதிர்வரும் கோடைக்காலத்தில்  தண்ணீர்  கிடைப்பதை   உறுதிப்படுத்தும்  ஏற்பாடுகளைச்  செய்யத்  தொடங்கி  விட்டோம்.  எனவே,   மக்கள்  தொடர்ந்து  பொறுமைகாத்து  அரசு  பிரச்னைக்குத்  தீர்வு  காணும்  என்று  நம்ப  வேண்டும்”,  என்றவர்  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.

குடிநீர்  விநியோகம்  பற்றிக்  குடியிருப்பாளர்களுக்குத்  தகவல்  தெரிவிக்க  வரும் வெள்ளிக்கிழமை  தொடங்கி  இரண்டு  நாள்களுக்கு  ஒரு  தடவை  செய்தியாளர்  கூட்டம்  நடத்தப்படும்  என்றும்  காலிட்  கூறினார்.