தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை!

vikneshwaran_002தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது.

காங்கிரஸ் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் நிறைவடைவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு அழைப்பட உள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

விக்னேஸ்வரனின் இந்திய விஜயம் பற்றிய திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: