தமிழகத்திலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது: எச். ராஜா பேட்டி

இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழகத்திலும், சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பா.ஜ.க வேட்பாளர் எச். ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டி ருந்த வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை வாக்களிக்க தனது குடும்பத்தினருடன் வந்த அவர் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்திய அளவில் மட்டுமல்லாது தமிழகத்திலும், சிவகங்கை மக்களவத் தொகுதியிலும் மோடி அலை வலுவாகவே இருக்கிறது. மேலும் கடந்த 25 நாள்களாக எங்கள் பிரச்சா ரம் சுற்றுப்பயணம் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் தாய்மார்களை சந்தி்த்தபோது இந்த முறை மாற்றத்திற்காக வாக்களிப்போம் என்று உறுதி கூறியிருக் கிறார்கள். ஆகவே இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது.

ஆனால் கடந்த இரண்டு நாள்களாக தொகுதி முழுவதும் ஆளும் கட்சிகளான அதிமுக, காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நோட்டீஸ் கொடுப்பதுபோல் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையம் ஏன் தடுக்கவில்லை? என்றுதான் எனக்குத் தெரியவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் சருகணி அருகே கீரமங்கலம் கிராமத்தில் பணம் கொடுத்ததை பிடித்துக்கொடுத்தும் ஆ.ஐ அலுவலகத்தினர் திரும்ப கொடுத்திருக்கிறார்கள். பணம் கொடுத்ததை தடுக்க வில்லை ஏன் என்று கேள்விக்குறியாக இருக்கிறது.

பணம் கொடுத்தவர்கள் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை விற்கக் கூடியவர்கள் என்று நினைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாக்காளர்கள் பணம் கொடுத்தவர் களுக்கு வாக்களிப்பதில்லை என்று தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

TAGS: