வரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை

dowry_dead_001வரதசட்சணை பாக்கிக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
 

ஜார்கண்ட் மாநிலம் ஹாசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் தேவி(28) .இவருக்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கிரி குடும்பத்தினர் தேவி குடும்பத்தினரிடம் இருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணையாக பெற்று கொண்டனர்.

இருந்தும் தேவியின் குடும்பத்திடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு வந்தனர், இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் தேவியின் கணவர் கிரி நோய்வாய்பட்டதில் அவரது கிட்னி செயல் இழந்தது.

இதனைத் தொடர்ந்து கிரியின் தாய் கொடுக்க வேண்டிய வரதட்சணை ரூ. 25 ஆயிரத்திற்கு பதில் தேவியிடம் கிட்னியை தானம் செய்ய வேண்டும் என எழுதி வாங்கி கொண்டார்.

தேவியும் கிட்னியை கொடுத்துள்ளார், ஆனால் வரதட்சணை எதுவும் இனி கேடக கூடாது என சத்தியம் வாங்கி கொண்டார்.

இருந்தாலும் கிரியின் குடும்பத்தினர் தொடர்ந்து தேவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். கொடுமை தாங்கமுடியாமல் கடந்த 16ம் திகதி தேவி உடலில் மண் எண்ணெய் உற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் ராஞ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பரிதாபமாக இறந்தார்.

இதனைத் தொடர்ந்து தேவியின் தந்தை தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி கொலை செய்து விட்டதாக பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தேவியின் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

TAGS: