ஹுடுட் பற்றி அன்வார் வாயைத் திறக்காதது ஏன்?

chandrakumananகிளந்தானில் ஹுடுட்டை  அமல்படுத்துவதற்கு,  பாஸ் நாடாளுமன்றத்தில்  தனி உறுப்பினர்  சட்டவரைவு  ஒன்றைக்  கொண்டுவரும்  முயற்சியில்  தீவிரமாக  ஈடுபட்டுள்ள  வேளையில்  அதைக்  கண்டுக்கொள்ளாமல்  இருக்கும்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கண்டனத்துக்கு  ஆளானார்.

“பிகேஆர்  அலோசகரும்,  நாடாளுமன்றத்தில்  எதிரணித்  தலைவருமான  அன்வார்,  அவ்விவகாரம்   பற்றிப்  பேசாதிருப்பது   ஏன்?

“எதற்காக  அவர்  வாயை  மூடிக்  கொண்டிருக்கிறார்? மலாய் சமூகத்தின்  ஆதரவை  இழக்க  நேரும்  என்று  அஞ்சுகிறாரா?”,  என  பிபிபி  தகவல்  பிரிவுத்  தலைவர்  ஏ.சந்திரகுமணன்  நேற்று  ஓர்  அறிக்கையில்  வினவினார்.