‘நடந்திடு கேள்விகள் உனக்கென்ன?’ – ஆதிநேசன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

kavibg01திரும்பட்டும் தமிழினம் என்று…

திசையெங்கும் புதுவேட்டையாம்…!

திருந்தட்டும் நம்மினம்- ஒன்றும்..

தெரியாமல் சிலர் அரட்டையாம்…!

அடங்கட்டும் வீரம் என்று…

அறிவை மறந்து ஒருகூட்டமாம்…!

அர்த்தமே இல்லாத எங்கள்..

அரசியல் விளம்பர போராட்டமாம்..!

தஞ்சமாய் பாலஸ்தீன் வந்தால்..

தங்கிட மண்ணில் இடமுண்டாம்..!

தமிழரே நீயிங்கு வந்தால்….

தீவிரம் பரந்து தழைக்குமாம்.. !

நீதிக்கு இருகண்கள் கட்டியே….

nesanநடந்திடும் நாடக தலைப்பென்ன. .?

நாடில்லை நாதியில்லா தமிழா….

‘நடந்திடு கேள்விகள் உனக்கென்ன?’

-ஆதிநேசன்,

கிமிஞ்செ,நெ. செம்பிலான்.

TAGS: