மா இந்து அறவாரிய தலைவரா? ஐயகோ,வெட்கக்கேடு!

ramasamyபிரதமர்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள  மா சியு கியோங் தேசிய இந்து அறவாரியத்  தலைவராக  நியமிக்கப்பட்டிருப்பது  இந்துக்களை  அவமதிக்கும்  செயல்  என  பினாங்கு  இந்து  அறவாரியத்  தலைவர்  பி.இராமசாமி  கூறுகிறார்.

“இந்துக்களுக்கு  இப்படியோர் இழிவா? அப்பொறுப்பைக்  கவனித்துக்கொள்ள  இந்தியர்களில்  தகுதியானவர்கள்  எவருமில்லையா?”, என  பினாங்கின் 2-வது   துணை  முதலமைச்சருமான அவர்  வினவினார்.

“அப்பொறுப்பை  ஏன்  மஇகா  தலைவர்களிடம்    ஒப்படைக்கவில்லை? இச்செயலின்வழி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் இந்நாட்டில் உள்ள  இந்தியர்களை  அவமதித்து  விட்டார். வெட்கக்கேடு!”,  என  இராமசாமி  கூறினார்.