இராமசாமியின் கொடும்பாவியை எரிக்கப் போவதாக பெர்காசா மிரட்டல்

Ramasamy effigyபினாங்கு துணை முதலமைச்சர் II பி. இராமசாமி மே 13 பற்றிய கூறிய கருத்து குறித்து விவாதிக்க முன்வராவிட்டால் அவருடைய கொடும்பாவியை எரிக்கப் போவதாக பினாங்கு பெர்காசா மிரட்டல் விடுத்துள்ளது.

அவருக்கு தைரியமிருந்தால் பெர்காசா உறுப்பினர்களுடன் விவாதம் நடத்த வருமாறு மாநில பெர்காசா தலைவர் பாட்ஸில் சுய்ப் சவால் விடுத்துள்ளார்.

மே 13 இனக் கலவரத்தை கொண்டு வாருங்கள் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசினிடம் கூறியதின் மூலம் இராமசாமி இனப் பதற்றத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார் என்று பாட்ஸில் கூறினார்.

“நாங்கள் அவரை பெர்காசாவுடன் விவாதம் நடத்த அழைக்கிறோம். இராமசாமி அவரது ஆதரவாளர்களை கொண்டு வரலாம். இது குறித்து ஓர் அதிகாரப்பூர்வமான கடிதத்தை நாங்கள் அவரது அலுவலகத்திற்கு நாளை அனுப்பி வைப்போம்.

“அவர் எங்களுக்கு எதிர்வினையளிக்கத் தவறினால், நாங்கள் அவரது கொடும்பாவி ஒன்றினை எரிப்போம்”, என்று பாட்ஸில் மேலும் கூறினார்.