இஸ்மா தலைவர் மீதான வழக்கு அக்டோபரில் மூன்று நாள்களுக்கு நடக்கும்

caseஈக்காத்தான்  முஸ்லிம்  மலேசியா (இஸ்மா)  தலைவர்  அப்துல்லா  ஷேக் அப்ட்  ரஹ்மான்  மீதான  வழக்கு  அக்டோபர்  13 நாள் தொடங்கி  மூன்று  நாள்களுக்கு  காஜாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு  வருகிறது.

செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி  நோர்  ஹஸானி  ஹம்சா,  வழக்கு  விசாரணைக்கான  நாளை  இன்று  நிர்ணயித்தார்.

“Kedatangan pendatang China bersama penjajah British satu bentuk pencerobohan.” (பிரிட்டிஷாருடன் சீனக் குடியேறிகளும்  வந்தது  ஒரு  வகை  ஊடுருவலாகும்)   என்ற  கட்டுரையில் சீனர்களை  ஊடுருவல்காரர்கள்  என்று  வருணித்ததற்காக  அப்துல்லாமீது  தேச நிந்தனை  சட்டத்தின்கீழ்  வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது.

அவர்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால் ரிம5,000  அபராதம் அல்லது  முன்றாண்டுச்  சிறை  அல்லது  இரண்டும் சேர்த்து  விதிக்கப்படலாம்.