வான் அஸிசா சிலாங்கூர் மந்திரி புசார், சதித்திட்டம் வலுவடைந்து வருகிறது

 

Aziza-mensesபிகேஆர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அளித்து வரும் அழுத்தம் காரணமாக ஹரிராயா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்றுவதற்கு பிகேஆர் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது.

நேற்றிரவு, பிகேஆர் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் கட்சி தலைவர்களை சந்தித்து அவரது துணைவியாரும் கட்சி தலைவருமான டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக முன்மொழிந்தாக தெரிய வந்துள்ளது.

கட்சி காலிட் இப்ராகிம்மை அகற்றுவதற்கு முடிவு செய்து விட்டதாக அன்வாரை மேற்கோள் காட்டி சீனமொழி நாளிதழ் சைனா பிரஸ் கூறுகிறது.

அன்வார் கட்சி தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறிக்கொள்கின்றன.