எம்எச்17-இலிருந்து சில பெட்டிகள் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதப் படையினர் கண்டெடுத்திருப்பதாக. டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதமர் எனச் சுயமாக. பிரகடனம் செய்து கொண்டிருக்கும் அலெக்சாண்டர் பொரோடாய் கூறினார்
அவை அவ்விமானத்தின் கறுப்புப் பெட்டிகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது ஆனால், வல்லுனர்கள்தாம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.
“அவை கறுப்புப் பெட்டிகள்தாம் என்பதை உறுதிப்படுத்தும் வல்லுனர்கள் எங்களிடம் இல்லை”என்று தெரிவித்த அவர். அனைத்துலக வல்லுனர்கள் வந்து சேர்ந்ததும் பெட்டிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.