கிறிஸ்துவ குறுவட்டுகளைத் திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

cdகோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம், “அல்லாஹ்”  என்னும்  சொல்லைக்  கொண்டிருந்ததற்காகக்  கைப்பற்றப்பட்ட  எட்டு  கிறிஸ்துவ  சமய  குறுவட்டுகளை(சிடி)  உரியவரிடமே  திருப்பிக்  கொடுக்குமாறு  உள்துறை  அமைச்சுக்கும்  அரசாங்கத்துக்கும், ஆறாண்டுகளுக்குப்  பிறகு,  இன்று  உத்தரவிட்டது.

2008,  மே  மாதம்  சரவாக்கிய  கிறிஸ்துவரான  ஜில்  அயர்லாந்திடமிருந்து அந்த  சிடி-கள் கைப்பற்றப்பட்டன.
சிடி-களைக் கைப்பற்றவும்  அவற்றைத்  தடுத்து வைக்கவும் சுங்கத்துறையின்  மூத்த  அதிகாரி  சூசனா  முயின்  உத்தரவிட்டது  சட்டவிரோத  செயலாகும்  என்று  தீர்ப்பளித்த  நீதிபதி  ஸலேகா  யூசுப்,  உள்துறை  அமைச்சருக்கே  அந்த  அதிகாரம்  உண்டு  என்றார்.

“எனவே, சிடி-களை  வாதியிடமே  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்”, என  நீதிபதி  ஸலேகா  ஆணையிட்டார்