சரவாக் டிஏபி மிரட்டல் : குவான் எங் கருத்துரைக்க மறுப்பு

guanடிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்,  சரவாக்கில்  டிஏபி-க்கும்  பாஸுக்குமிடையில்  மூண்டுள்ள  சர்ச்சை  குறித்து  கருத்துரைக்க  மறுத்தார்.

பின்னர்  அதன்மீது  அறிக்கை  வெளியிடுவதாக  பினாங்கு  முதலமைச்சருமான  லிம்  கூறினார்.

உடனடியாகக்  கருத்துரைக்க  மறுப்பது  ஏன்  என்று  வினவியதற்கு, “உங்களுக்கே  தெரியும்” என்றார்.

“ஊடகங்கள்  சுற்றி  இருக்க  நான்  ஏதாவது  சொன்னால் அப்படியே  திரித்துக்  கூறி  விடுவார்கள்.  அதனால், அறிக்கைக்காக  நீங்கள்  காத்திருப்பதுதான்  நல்லது”, என்றுரைத்தார்.

கிளந்தானில்  ஹுடுட்  கொண்டுவருவதன்  தொடர்பில்  பாஸ்  புத்ரா ஜெயாவுடன்  தொடர்ந்து ஒத்துழைத்தால்   சரவாக்  டிஏபி  பக்காத்தான்  ரக்யாட்டிலிருந்து  வெளியேறலாம்  என  மலேசியாகினி  நேற்று  அறிவித்திருந்தது  பற்றித்தான்  லிம்  இவ்வாறு கூறினார்.