எம்எச்17: உயிரிழந்தவர்களுக்கு நியு யோர்கில் மலேசியர்கள் அஞ்சலி

vigilமலேசிய விமான  நிறுவனத்தின் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதன்  பின்னணியில்  உள்ள  உண்மைகளைக்  கண்டறிய  உலகம்  முயன்று  கொண்டிருக்கும்  வேளையில்,  நேற்றிரவு  நியு  யோர்கில்  உள்ள  மலேசியர்கள்  அச்சம்பவத்தில்  உயிரிழந்த  298  பேருக்கும்   அஞ்சலி  செலுத்தும்  நிகழ்வு  ஒன்றை  ஏற்பாடு  செய்திருந்தனர்.

மலேசியர்களுடன்  அமெரிக்கர்கள்,  சிங்கப்பூரர்கள்,  மொரோக்கோ  நாட்டவர்,  இந்தோனேசியர்கள்  என  சுமார்  60பேர்  அந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.  இரவு  9 மணிக்கு  வாஷிங்டன்  சதுக்கப் பூங்காவில்  திரண்ட  அவர்கள்    மலர்களை  வைத்தும்  மெழுகுதிரிகளை  ஏற்றிவைத்தும் பிரார்த்தனை  செய்தும்  இறந்தவர்களுக்கு  அஞ்சலி  தெரிவித்தனர்.