அன்வாருக்கு அதிகார வெறி பிடித்துவிட்டது அதனால்தான் மனைவியை எம்பி ஆக்க முயல்கிறார்

hasan pasடாக்டர்  வான்  அசீசா  வான்  இஸ்மாயிலை சிலாங்கூர்  மந்திரி  புசாராகும்  அன்வார்  இப்ராகிமின்  முயற்சி  பற்றிக்  குறிப்பிட்ட  முன்னாள்  பாஸ்  உதவித்  தலைவர்  ஹசன்  அலி  அதை  “கிறுக்குத்தனம், பேராசை,நம்பிக்கை இழந்த நிலை”  என  வருணித்தார்.

வான் அசீசாவை  எம்பி  பதவியில்  அமர்த்துவது  அவரையே  திருப்பித்  தாக்கப்  போகிறது  என்றாரவர்.

பாஸிலிருந்து  கட்சிநீக்கம்  செய்யப்பட்டவரான  ஹசான்,  அன்வாரின்   அண்மைய  நடவடிக்கை சிலாங்கூரில் பக்காத்தான்  ரக்யாட்டைப்  பலவீனப்படுத்தியுள்ளது  என்றார்.

அதிகாரத்தை  மனைவி- மக்களிடம்  கொண்டு  வந்து  சேர்க்க  அன்வார்  நடத்தும்  ஒரு  நாடகம்தான்  அது.

“பழங்காலத்தில்  வேண்டுமானால்  அது  வரவேற்பைப்  பெற்றிருக்கும்.  ஆனால், 21ஆம்  நூற்றாண்டில்  அதை  ஒரு  கோமாளிக்  கூத்தாகத்தான்  மக்கள்  பார்க்கிறார்கள்”, என  ஹசான்  கூறினார்.