டிஏபி, எம்பி மாற்றத்துக்குப் பச்சை விளக்குக் காண்பித்தது

dap mbபிகேஆர்  யாரை மந்திரி  புசாராக  முன்மொழிந்தாலும்  அவரை  டிஏபி  ஆதரிக்கும். நடப்பு  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமிடம்  பொறுமை இழந்ததன்  விளைவாக  அது இம்முடிவுக்கு  வந்துள்ளது.

“மந்திரி  புசாரிடம்  இப்போதெல்லாம்  பேச  முடிவதில்லை”, என  சிலாங்கூர்  டிஏபி-இன்  மூத்த  அதிகாரி  ஒருவர்  மலேசியாகினியிடம்  அலுத்துக் கொண்டார்.

யாருடைய  கருத்தையும்  காலிட்  கேட்பதில்லை  என்றாரவர்.

“தமக்கு  மட்டும்தான்  சிந்திக்கத்  தெரியும்  என்பதுபோல்  நடந்துகொள்கிறார்”, என்றவர்  கடுப்பாகக்  கூறினார்.