நா காக்க: முன்னாள் சிஜே-க்கு அம்பிகா அறிவுறுத்தல்

ambikaமுன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட் முகம்மட்  கருத்துச்  சொல்வதில்  கவனமாக  இருக்க  வேண்டும்  என்று   அம்பிகா  ஸ்ரீநிவாசன்  அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதிகள்  பணி ஒய்வு  பெற்று  விட்டாலும்கூட  எண்ணிப்  பேசுதல்  வேண்டும்,  ஏனென்றால்  அவர்களின்  கருத்து  நீதித்துறையைப்  பாதிக்கும்  என்று  இப்போது  என்ஜிஓ-வான  நெகாராகூ-வுடன்  தம்மை  இணைத்துக்  கொண்டிருக்கும்  அந்த முன்னாள்  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர் கூறினார்.

“முன்னாள்  நீதிபதிகள்  பணி ஓய்வு பெற்ற  பின்னர்  இப்படித்தான்  வாழ  வேண்டும்  என்று  ஓர்  எழுதாச்  சட்டமே  இருக்கிறது”  என்று  பினாங்கில்  ஒரு  கருத்தரங்கில்  பேசியபோது  அம்பிகா  கூறினார்.

“நீதித்துறைக்குக் கெட்ட  பேர்  ஏற்படாதிருக்க  அவர்கள்  அவ்வாறு  வாழ  வேண்டும்

“மற்ற  நாடுகளில்  அதற்கு  வழிகாட்டும்  நெறிமுறைகள்  உண்டு”, என்றார்.

பினாங்கில்  இஸ்லாத்துக்கு  ஆபத்து  என்று  ஹமிட்  குறிப்பிட்டது  பற்றிக்  கருத்துரைத்தபோது  அம்பிகா  இவ்வாறு  சொன்னார்.