உக்ரேனில் போர் ஒய்வை ஏற்படுத்த மலேசிய முயற்சி

ceaseஉக்ரேனில்,   போர்  ஓய்வை  ஏற்படுத்தும்  முயற்சியில்  மலேசியா  ஈடுபட்டுள்ளது. அதற்காக  உக்ரேன்  அரசாங்கத்துடனும்  கிளர்ச்சித் தரப்பான  டொனெட்ஸ்க்  குடியரசுடனும்  அது  பேச்சுக்கள்  நடத்துகிறது.

விமானம்  விழுந்து  நொறுங்கிக்  கிடக்கும்  பகுதியைத்தான்  போர்  ஓய்வுப் பகுதியாக  அறிவிக்க  முயற்சிகள்  நடக்கின்றன.  என  மலேசியாவின்  சிறப்பு  விசாரணைக்  குழுவுக்குத்  தலைமையேற்றிருக்கும்  கைருல்  ஹில்மி  மொக்தார்  தெரிவித்தார்.

போர் ஓய்வு  அறிவிக்கப்படுவது மலேசியா, நெதர்லாந்து,  ஆஸ்திரேலியா  ஆகிய  நாடுகளைக்  கொண்ட  விசாரணைக் குழு விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்தில்  தேடும்பணியை  மேற்கொள்ள  உதவியாக  இருக்கும்  என்றாரவர்.