போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டகாசம் – துணை பிரதமரின் மனைவி கடத்தல்

amadou_ali_001கேமரூன் நாட்டின் துணை பிரதமரின் மனைவியை, போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்

நைஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் போகோஹாரம் தீவிரவாதிகளை ஒடுக்க உலக நாடுகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த கேமரூன் அரசாங்கம், தங்கள் நாட்டு இராணுவத்தை நைஜீரியாவுக்கு அனுப்பியது.

இதனால் கோபமடைந்த தீவிராவாதிகள் கேமரூன் நாட்டின் துணை பிரதமரின் மனைவியை கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவின் எல்லையை தாண்டி கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரமான கொலொபத்தாவில் நுழைந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் துணை பிரதமர் அமாதாவ் அலியை தாக்கியுள்ளனர். பின்னர் அவரது மனைவியை கடத்திச்சென்றனர். அத்துடன் அந்நகரின் மேயராக உள்ள செய்னி பவ்கர் லாமெய்ன்னையும் தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.

தனது குடும்பத்துடன் ரம்ழான் கொண்டாட வந்த துணை பிரதமரை தாக்கிய தீவிரவாதிகள், அவரது மனைவியை கடத்தியுள்ளனர். இதன்போது மூன்று பேரை கொன்றதாக கேமரூன் நாட்டின் ராணுவ தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அங்கு நெருக்கடியான நிலைமை காணப்படுவதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.