சக்கர நாற்காலியில் தள்ளி வரப்பட்ட விஜயகாந்த்

vijayakanth_002சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வேலைகள், தொண்டர்களுடன் சந்திப்பு என பரபரப்பாய் தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டதால் விஜயகாந்துக்கு உடல் நலப் பாதிப்பு உண்டானது.

இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த், அதன் பிறகு கடந்த 13ம் திகதி சிங்கப்பூர் சென்றார்.

அங்கு பிரபல மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின் இன்று சென்னை திரும்பினார் விஜயகாந்த்.

சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் மூலம் காலை 9.20 மணிக்கு சென்னை வந்த விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார்.

விஜயகாந்த் இன்று சென்னை வருவது குறித்து தொண்டர்களுக்கு தெரியாததால், விமான நிலையத்திற்கு கட்சி தொண்டர்கள் யாரும் வரவேற்க வரவில்லை.

விஜயகாந்த் விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். போர்வையால் உடலை மூடியபடி அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். பின்னர் அவரும் அவரது மனைவியும் காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.