‘சர்வாதிகாரி’ அன்வார் அரசியல் ஓய்வுபெறுவதே நல்லது

eidமுகநூலில்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்மீது வசை  பாடியுள்ளார்  பாஸ் கட்சி  ஆய்வு  மையத்தின்  நடவடிக்கை  இயக்குனர்  முகம்மட்  ஜுஹடி  மர்ஸுகி.

பக்காத்தான்  ரக்யாட்டை  அவர்  நடத்தும்  விதத்தை  வைத்து  அன்வாரை  ஒரு “சர்வாதிகாரி”  என  முத்திரை  குத்திய ஜூஹடி, அன்வார்  ஓய்வுபெற  வேண்டும்  என்பதே  தம்  ஹரி  ராயா விருப்பம்  என்றும் கூறினார்.

“அன்வார் இப்ராகிமுக்கு  ஈத் முபராக்  வாழ்த்து கூறுகிறேன்.  அவருடைய  தனிப்பட்ட  நோக்கங்களால்  பல  மலேசியரின்  வாழ்க்கை  பாதிக்கப்பட்டிருக்கிறது  என்பதால்  அவர் அரசியலிலிருந்து  ஓய்வுபெற  வேண்டும்  என  உளமார  விரும்புகிறேன்”,  என்றவர்  குறிப்பிட்டார்.