அசிசா: பொம்மை மந்திரி புசாராக இருக்க மாட்டேன்

azizahசிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியை  ஏற்க  தயாராக  இருப்பதுபோல்  காணப்படும்  பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  அவர்  அப்பதவியில்  ஒரு “கைப்பாவை”  போலத்தான் இருப்பார்  என்று  சொல்லப்படுவதை  மறுக்கிறார்.

மந்திரி  புசார்  பதவிக்கு  அவரது  பெயர்  குறிப்பிடப்பட்டிருப்பது  பற்றி  முதன்முறையாக  கருத்துரைத்த  வான்  அசீசா, “அவர்கள்  எப்படி  வேண்டுமானாலும்  குறை  சொல்லட்டும். நாங்கள்  ஒரு  குழுவாக  இருக்கிறோம். குழுவாக  செயல்படுவதற்குத்தான்  முக்கியத்துவம் கொடுக்கிறோம்”, என்றார்.

“அது  பெரிய  பொறுப்புத்தான். ஆனால், மக்களுக்காக  அதை  ஏற்கத்தான்  வேண்டும்.  நான்  வகிக்கும் பதவி  எல்லாமே  பொறுப்பானதுதான்.  பதவியில்  இல்லாவிட்டால்கூட  மக்களுக்குச்  சேவை  செய்ய  வேண்டும்,  அதுதான் முக்கியம்”, என்றவர்  குறிப்பிட்டார்.