போர்க்குற்ற விசாரணைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறது கூட்டமைப்பு – சிங்கள ஊடகம்

tna_logo_2இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்குழுவிடம் கையளிப்பதற்கான விசேட அறிக்கை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

யுத்த குற்ற விசாரணையை மேற்கொள்கின்ற குழுவில் சாட்சி வழங்கிய இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.

எனினும் தடையையும் மீறி சாட்சி வழங்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்காக சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்து வைத்துள்ளது.

இது வெளிநாட்டு பிரதிநிதி ஒருவரின் ஊடாக சர்வதேச விசாரணைக் குழுவிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: