கொழும்பில் படை கருத்தரங்கில் இந்திய படைஅதிகாரிகளா? மதுரை நீதிமன்றில் வழக்கு!

timthumbகொழும்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் இந்திய படை அதிகாரிகள் பங்குபற்றுகின்றமையை ஆட்சேபித்து மதுரை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்கும்படி இந்திய மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பங்குபற்றுவதற்கு எதிராக முதலில் இடைக்காலத்தடை உத்தரவும், தொடர்ந்து தடையும் வழங்கும்படி கோரி விருதுநகரைச் சேர்ந்த எஸ்.எம். ஆனந்தமுருகன் என்ற சட்டத்தரணி தாக்கல் செய்திருந்த மனுவை நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், ஆர் மகாதேவன் ஆகியோரைக் கொண்ட ஆயம் நேற்றுப் பரிசீலித்த பின்னர் மத்திய அரசுக்கு மேற்படி உத்தரவை விடுத்தது.

TAGS: