இனவாதம்!!!…..(சிவாலெனின்,சுங்கை,பேராக்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

racism-wrongஇனவாதம்

முற்றில்லாமல் தொடர்கிறது

இனவாதிகளின் அராஜகம்

தொடர்கதையானது…….

மூவினம் வாழும்

நாட்டில் ஓரினம்

நாட்டாமையானது

நாட்டை வளம்செய்தவர்கள்

வந்தேறிகளாம்……

ஊரெல்லாம்

ஒரே மலேசியா முழக்கம்

ஓட்டுக்காக  ஆளும்வர்கத்தின்

மந்திர சொல்லு…….

தடியெடுத்தவனெல்லாம்

தண்டலாம்

இனவாத இயக்கங்களின்

அநாகரிகம் ஓயவில்லை

தட்டிக்கேட்கவும் யாருமில்லை

சட்டம்கூட இனவாதிகளின்

சட்டையானாது…….

தலைவர்கள் வாய்

திறக்க மறந்து

மௌனசாமியாய் ஆனதால்

நமது

தன்மானமும் சுயஉரிமையும்

அடமானம் வைக்கப்பட்டது…….

ஆளும்வர்க்கம்

துணைபோனதால்

காவல்துறை கடமை

மறந்தது

சட்டத்துறை மௌனமானது…..

நாட்டில்

இனவாதம் தலைதூக்கி

புரிந்துணர்வும் ஒற்றுமையும்
கேள்விகுறியானது!!

-சிவாலெனின்,சுங்கை,பேராக்

TAGS: