நீக்கப்பட்ட எக்ஸ்கோ-கள் அலுவலகத்தைக் காலி செய்ய உத்தரவு

exco1 சிலாங்கூர்  ஆட்சிக்குழுவிலிருந்து  நீக்கப்பட்ட டிஏபி, பிகேஆர்  ஆட்சிக்குழு  உறுப்பினர்கள் (எக்ஸ்கோ) அறுவரும்  அவர்களின்  அலுவலகத்தை  உடனடியாக  காலி  செய்ய  வேண்டும்  என்று  கூறப்பட்டுள்ளது.

டிஏபி-இன்  இயன்  யோங்  ஹியான்  வா, வி,கணபதி  ராவ்,  தெங்  சாங்  கிம், பிகேஆரின்  ரோட்சியா  இஸ்மாயில், தரோயா  அல்வி,  எலிசபெத்  வொங்  ஆகியோரே  அவறுவருமாவர்.

மாநில  சுல்தானின்  இணக்கத்துடன்தான்  அவர்கள்  நீக்கப்பட்டதாக  சிலாங்கூர்  மாநிலச்  செயலாளர்  முகம்மட் குஸ்ரின்  முனாவி  தெரிவித்ததாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.