‘இதுதான் நேர்மைக்குக் கொடுக்கும் விலை’ என்றார் எம்பி

integrityநேர்மைக்காக  இருப்பதற்குக்  கொடுத்த  விலை,  அதுதான் தமது  இன்றைய  நிலை  என்று  கூறியுள்ளார் சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்.

சிலாங்கூர்  நிர்வாகத்தில் தொடரும்  நெருக்கடிக்காக அவர்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்.

“பரவாயில்லை. அரசியல்வாதியாக  நினைத்த  நான்  அதன்  விளைவுகளையும் ஏற்கத்தானே  வேண்டும். இதுதான்  நேர்மைக்குக்  கொடுக்கும்  விலை”, என்றாரவர்.  இன்று  ஷா  ஆலமில் பிகேஎன்எஸ் மாநாடு  ஒன்றில்  உரையாற்றியபோது அவர்  இவ்வாறு  கூறினார்.

பின்னர்  அதைப்  பற்றிச்  செய்தியாளர்கள்  வினவியபோது   காலிட்  வாயைத்  திறக்கவில்லை.

20 பாதுகாவலர்கள்  அவரைச்  சுற்றி  நின்றுகொண்டு  செய்தியாளர்கள்  அவரை  அணுக  முடியாதபடி  தடுத்தனர்.