எம்ஆர்டி விபத்தை அடுத்து சிஇஓ பதவி விலகினார்

azharநேற்றிரவு  எம்ஆர்டி கட்டுமான  வேலை  நடக்கும்  இடமொன்றில்  நிகழ்ந்த  விபத்தில்  மூவர்  கொல்லப்பட்டதை  அடுத்து  எம்ஆர்டி கார்ப்பரேசன்  தலைமை  செயல் அதிகாரி  அஸ்ஹார்  அப்துல்  ஹமிட், பதவி  விலகுவதாக  அறிவித்துள்ளார்.

இன்று  சுங்கை  பூலோவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அவர்  இதனை  அறிவித்தார்.

எம்ஆர்டி டமன்சாரா  நிலையம்  கட்டப்படும்  இடத்தில் 650  டன்  காங்கிரீட் பாளங்கள் விழுந்தில்  மூன்று  வங்காள  தேசத்  தொழிலாளர்கள்  இறந்தனர்.

அஸ்ஹார்  இதற்குமுன்  சைம்  டார்பி நிர்வாக  இயக்குனராக  இருந்தார்.